“ எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு “ ------- குறள்
அய்யன்
வள்ளுவனின் வாக்கிற்கு இனங்க நாம் எதையும் உண்மை நோக்குடன் சிந்தித்தல் வேண்டும்.
மாந்தரில் பலவித நிறம், குணம், உருவம் என்று பலவாராக உள்ளனர். அதுபோல் அவர்களின்
கொள்கைகள் செயல்கள், சிந்தனைகள்,கருத்துக்கள் மாறுபாடு உடையதாக இருக்கிறது. இதில்
ஒழுக்க நெறி நின்றாரை இவ்வுலகம் போற்றிப் புகழ்கிறது. இவர்களில் சித்தர்களின் நெறிவழி
பார்ப்போம்.
அன்பின்
வழியது உயிர்நிலை அஃது இல்லார்க்கு
என்புதோல்
போர்த்த உடம்பு
:- குறள்
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற
உடம்பாகும். அன்பு இல்லாதார்க்கு உள்ள உடம்பு உயிரில்லாத வெறும் எலும்பைத் தோலால்
போர்த்திய வெற்று உடம்பு ஆகும் என்று வள்ளுவர் சொல்கிறார். இதையே நம் முதல்
சித்தர் “ அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் “ என்று சொல்கிறார். அன்புதான் சிவம்
சிவம் தான் அன்பு என்றும் இதைவிட உயர்நிலை குணம் இல்லை எனவே இதனை சகுனமாக இரு
வேறாக பார்ப்பது எவ்வாறு அவ்வாறு சொல்கிறவர்கள் அறிவில்லாதவர்கள் ஆவர். என்று
அன்பை மையப்படுத்தி சொல்கிறார்கள்.
மனிதன் குமுகாய கட்டமைப்புக்குள் வாழத்தலைப்பட்டபின் அக்கட்ட அமைப்பின் ஓர் அங்கமானான். அவனது பரிணாம வளர்ச்சியில் அவனிலிருந்து பல சிந்தனைகளின் வெளிப்பாடுகள் தோன்றின. அதனை செயலாக்க முற்பட்டான். அவன் வாழ்வியல் சூழ்நிலையில் திடீர் என்று ஏற்படும் இயற்கை சீற்றங்களைக் கண்டு ஆரம்ப காலத்தில் பயந்தான், புரியாமல் விழித்தான். பின் அவைகள் ஓரளவுக்கு பழக்கப்பட்ட பின் அதனை எதிர் நோக்கும் வகையினை தெரிந்து கொண்டான். சிலவற்றுக்கு அவனுக்கு காரணம் தெரியவில்லை அவியற்கை செயல்களை தெய்வங்களாக எண்ணி வழிபட ஆரம்பித்தான். குழுக்களாக வாழ ஆரம்பித்த பின் ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்கு என்று ஒரு தெய்வம், தலைவன் என்று ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் பல தெய்வ வழிபாடுகள் தோன்றலாயின. தங்கள் தலைவர்கள் அல்லது தங்கள் குடும்பத்தில் இறந்த ஒருவரை பிரிவின் காரணமாக அவர்களை தெய்வங்களாகவும் வழிபடலாயினர். அவர்களுக்கு அல்லது தாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு தாங்கள் உண்பதையே அதற்கும் படைத்து வழிபடலாயினர்.
இயற்கையின் சில செயல்களையும் இடி, மின்னல்,
காற்றுக்கும் காரணம் தெரியவில்லை பின் அவற்றை வேறு ஏதோ ஒரு இடத்தில் இருப்பவர்கள்
இயக்குகின்றனர் என்று நம்பினான் அவர்களை அந்த இயற்கை நிகழ்வுகளுக்கு
தலைவனாக்கினான். தெய்வாமாகினான். இது இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்று
நம்பி சமாதிகள் கட்டியும் தாழிகளில் புதைத்தும் பிரமிடுகளாகவும் கட்டிவைத்தான்.
நம் உடலை இயக்கிவருவது எது என்று புரியவில்லை. சிந்தித்தான் அதனால் கண்ணுக்குத்
தெரியும் இந்த உடல் ஸ்துல உடல் என்றும் இதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த
உடலுக்கு சூச்சம உடல் என்றும் வகைபடுத்திக் கொண்டான். அதற்கு ஆன்மா அல்லது ஆத்மா
என்றும் பெயர் வைத்தான். பின் மீண்டும்
சந்தேகங்கள் பல
தோன்றின இந்த ஆன்மா அல்லது ஆத்மா இறந்த பின் உடலில் இருந்து எங்கு செல்கிறது என்று
சிந்தித்தான் அதன் விளைவு பரமான்மா என்று ஒன்று உள்ளது இது அதனுடன் கலந்து
விடுகிறது என்று சொன்னான். சிலர் இதை தங்கள் வருவாய்க்கு பயன் படுத்திக் கொண்டனர்
சிறிய ஆன்ம செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கு ஏற்ப மிண்டும் தாழ்ந்த
பிறப்புக்கலாகவும் பிறக்கின்றன என்று கருதத் தலைபட்டனர். இது ஒரு சாராரின் கருத்து.
மற்றொரு சாரார் ஐம்புலன்களுக்கு
அப்பாலுள்ளதை அறியமுயலுதல் ஆகியது. இவர்கள் எந்த முடிவுகளையும் சிந்தித்து அறிவு கொண்டு ஆய்ந்து அதன் முடிவுகளை
கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர். ஒருசிலர் ஒரு நிலைக்கு மேல் தன் அறிவாற்றலை பயன்
படுத்தி சிந்திக்காமல் தங்கள் முன்னோர்கள் கூறிய கருத்துக்களை சரி என்று
நம்பினார்கள் ( இன்றும் இது போன்ற இருவகுப்பு மக்கள் இருக்கச் செய்கின்றனர் )
சிலர் தெய்வங்களிலும் தங்கள் தங்கள் எண்ணத்துக்கும் செயலுக்கும் தக்கவாறு
தெய்வங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். இதனால் சில தெய்வங்கள் நல்ல செயல்களுக்கு
என்றும் சில தீய செயல்களுக்கும் என்றும் அவற்றிற்கு குட்டிச் சாத்தான் காளி போன்ற
பல பெயர்களில் வழங்கினர். நற்செயல்கள் செய்கிறவன் தான் படைத்த கடவுளுக்கு
பிரியப்பட்டவனாகிறான். தீயசெயல்கள் செய்பவன் இவன் படைத்த கடவுளால் தண்டிக்கப்
படுவாதாக நம்பினான். தங்களின் செயல்களுக்கு காரணங்கள் கடவுள் என்றும், தன்னைப்
படைத்தது கடவுள் என்றும் நல்ல செயல்களும் தீய செயல்களும் தனது முன் செய்த
நற்செயல்கள் தீய செயல்களுக்கு ஏற்ப மறு பிறப்பில் ஏற்படுகிறது என்று குமுகாயக் கூட்டத்தில்
வலிமை வாய்ந்தவன் உண்டாக்கிய கருத்துக்களை ஏற்றனர் சிலர் இவ் வலிமை வாய்ந்தவன்
அக்கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் தலைவானாகவும் ஏற்றுக்கொண்டனர். முதலில் இயற்கையையும்
அது சார்ந்த வல்லமை படைத்த மிருகங்களையும் வானங்கினான். பின்னர் தங்களைப்போல்
உருவங்கள் படைத்தான். அதற்கு தங்களைப் போல் உடை அணிவித்தான் அவ்வாறு ஆதியில் அவன்
உருவாக்கிக் கொண்டது ருத்திரன்,காளி போன்ற உருவங்கள் ஆகும் அவற்றின் உடை மனிதனின்
ஆதிகால தோலாடையும் மிருகங்களைக் கொள்ள உபயோகிக்கப்படும் சூலாயுதம் பாம்புகள்
போன்றவற்றை கற்பித்துக் கொண்டான். பிற்காலத்தில் நகைகள் தங்கம் வெள்ளி போன்ற
உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்டபின் தங்களின் கடவுள்களுக்கு அவற்றை ஆபரணங்களாக
அணிவித்தான். அவ்வாறு உண்டான தெய்வங்கள் தான் விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, பிர்மா
போன்ற தெய்வங்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தெய்வத்தை உண்டாக்கிக் கொண்டான்.
உற்பத்திக்கு, காத்தலுக்கு, அழித்தலுக்கு என்று பலவாராக உண்டாக்கினான். இது போல்
ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் சூழ் நிலைக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப
உண்டாக்கிக் கொண்டார்கள். வடநாட்டு பிர்மா முதலிய தெய்வங்களுக்கு தாடிகள் உள்ளது
போல் இருப்பதைக் காணலாம். அதுபோல் இன்றும் தமிழ் நாட்டிலும் கற்சிலைகள் சிலவற்றில்
காணலாம்.
இன்று இருப்பது போல் கருவிகள்
கண்டுபிடிக்கப் படவில்லை. அவர்கள் ஐம்புலன்களின் வழியாக கண்டதையும், கேட்டதையும்,
உணர்ந்ததையும் கொண்டு முடிவுகள் செய்தனர். வேதகாலங்களில் அவர்கள் மேற்கண்டவாறு
தான் மனித வர்க்கம் தங்களையும், தாங்கள் சார்ந்த சுற்றுச்சூழலைக் கொண்டு
விளங்கிக்கொண்டனர். நான் முதல் தொகுதியில் சொல்லியுள்ளபடி உணவு, மருந்துவ வழிகளை மிருகங்களின்
செயல்களில் இருந்து தெரிந்து கொண்டான். பிற்காலாத்தில் அவன் அறிவு முதிற்சிக்கு
ஏற்ப இயற்கையில் இருந்து பல வற்றை தெரிந்து கொண்டான். இயற்கை உயிர்களின் பிறப்பு
நான்கு வழிகளில் ஏற்ப்படுகின்றது என்று சொன்னான். இதனை முதல் வேதமான ருக்கில்
அன்டஜம், சுவேதஜம், உத்பிஜம், சரயுஜம் என நான்கு வழிகளில் உயிர்கள் வெளிவரும்
வழியாக சொல்லப்பட்டு உள்ளது. முட்டையில் இருந்து வெளி வரும் உயிரினங்கள், அடுத்து
தன்னில் இருந்து பல்கிப் பெருகுவன ( உதாரணம் அருகம்புல் தன் ஒரு செடியில்
கிளைகாளாக பிரிந்து வேரோடும். இது போல் பாக்டிரிய போன்ற கிருமிகள் ) அடுத்து
விதையில் இருந்து வெளி வரும் உயிரினம், அடுத்து கருப்பையில் இருந்து குட்டி
போடுவதன் மூலமாக தன் இனவிருத்தி செய்வது. இவ்வாறு வரும் உயிரினங்கள் தோற்றத்தில் (
பார்க்கையில் ) ஏழு விதமாக காட்சி தருகிறது, அது நிற்பன( நிலையாக ஓரிடத்தில்
இருக்கக் கூடிய மரம், செடிகள் ) அடுத்து பறப்பன, அடுத்து நடப்பன ( சில நூல்களில்
மனிதர்,தேவர் என்று சொல்வது தவறு மனிதரைப் பார்க்கலாம் தேவர்கள் என்ற ஓர் உயிரினம்
உள்ளதை யாரும் பார்த்தது இல்லை, மற்றும் மனிதர் நடப்பன வற்றுள் அடங்கி விடுகிறான்.
) படர்வன ( கொடித் தாவரங்கள்) பல்கிபெருகுவன (பாக்டீரியா, பாசம் எனப்படும்
பாசிவகைகள்,) நீர்வாழ்வன - நீந்தக்
கூடியது, ஊர்வன, என ஏழு விதங்களில் தோற்றம்பெற்ற 8400000 – லட்சம்
உயிர் இனங்கள் உள்ளதாக சொலலப்பட்டு உள்ளது. இதே கருத்தை சித்தர்களும்
சொல்லியுள்ளனர்,. திருவள்ளுவ நாயனார் பஞ்சரத்தினம் -500 ல் கீழ்க்கண்டவாறு
சொல்கிறார்.
யோனியது
நான்குவகை யோசிகில் தோற்றமேழ்
மானிலத்தில்
இத்தை மதிப்பார்யார் – வானிலத்தில்
வீழ்ந்த
உதகநீர் மெய்கருக்கும் கற்பமாம்
ஆழ்ந்திதனை
ஆய்ந்தார்க்மை
இதே
கருத்தினை ஞான வெட்டியான் 1500 ல் சொல்கிறார்.
நால்வகை
யோனிதனில் பிறந்துதித்த
நால்வேத
ஞானமும் வந்துதித்ததுகான்
கோலமிதையறியாமல்
உலகோருமே
குருடர்கள்
வேறு செய்து இனம் பிரிப்பார்
மலப்பறையநென்றே
உலகர்கூடி
வாய்பிதற்றி
வழக்கு வாதாடுவார்கான்
பலரறியாமல்
லென்னைப் பழித்துப்
பகடித்தனராண்டே
கேளிர்
உயிரினங்கள்
நால்வகையான வழிகளில் பிறக்கின்றன.அவ்வாறு கருப்பையில் இருந்து வந்த மனிதன்
அறிவுவால் வேதம் வந்தது ஆனால் உலகில் சில
குருடர்கள் இதை அறியாமல் சாதிகள் வேறு வேறாக பிரித்து இவன் பறையன் என்றெல்லாம்
வாதாடுவார்கள். என்னை தொழிலால் சாதிபிரித்து இழிவாக பழித்தனர்.
அந்தணர்
வேதியர்கள் என்குலத்தை
அசட்டுப்
பறைய னென்றுதள்ளினர்காள்
சத்தியுஞ்சடங்கருத்து
வள்ளுவனென்னைச்
சாம்பவ
மூர்த்திஎன்றே தான் தொழுதார்
விந்துவுநாதமுங்கூடி
எங்கெங்கு மேவும்
எண்பத்துநான்குயிற்கு
மேலதிகமாம்
வந்தவழி
தனையறியார் பிரமகுல வங்கிஷாவா
னென்றுமவர்
போற்றிசெய்வார்
இவ்வாறு
என்னைப் பழித்தவர்கள் யார் என்றால் அந்தணர் வேதியர்கள் என்போர் ஆவர்.ஆனால்
வள்ளுவனாகிய என்னை சாம்பவமூர்த்தி என்று வழிபடுவார். விந்துவும், நாதமும் கூடி
உலகில் (8400000) எண்பத்துநான்கு லட்சம் ஜீவராசிகளுக்கு மேல் தோன்றின. இவ்வாறு பல
நுற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்து இருந்தனர்.
சித்தர்களின் கடவுள் நிலை தனை அறிய
வேதகாலத்தில் ஆரியர்கள்- திராவிடர்கள் பற்றியும் தெரிந்து கொண்டால் தான் இன்றைய
நிலையில் சில விளக்கங்கள் கிடைக்கும். ஆரியப்பண்பாடு வேறு திராவிடப் பண்பாடு
வேறாகும. தமிழகத்தில் ஆரியர்கள் புகும்முன் இருந்த வழிபாடுகள் வேறாகவும் சடங்கு
சம்பிராதயங்கள் ஆரியர்கள் வந்தபின்புதான் புகுத்தப் பட்டதும் சித்த மருத்துவ
நூல்கள் இயற்றிய சித்தர்கள் மகரிஷிகள் என்போரின் கருத்துக்களில் இருந்து அறியலாம்.
வேதகாலத்திற்கு முன் சிந்து நதி பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் வேறு என்பது வரலாற்று அறிஞர்கள் சொல்லியுள்ள கருத்தாகும். அக்காலத்தை சுமார் கி.மு. 5000 – வருடங்கள் என்று நிறுவுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் சித்திர எழுத்துக்களையே பயன் படுத்திவந்தனர். அது போல் வேதகாலத்தில் வேதங்களை இயற்றிய ரிஷிகள் தங்களின் கருத்துக்களை மனப்பாடம் செய்து வாய்மொழியாகவே ஒருவரிடம் இருந்து இன்னொருவரும் அறிந்து கொண்டனர் இது போல் தமிழிலும் பழைய நூல்கள் யாவும் வசன நடையில் இல்லாது பாடலாக இருப்பதற்கு காரணம் பாடல்களை எளிதில் மனதில் பதியவைக்க முடியும் என்பது தான்.
வேதகாலத்திற்கு முன் சிந்து நதி பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் வேறு என்பது வரலாற்று அறிஞர்கள் சொல்லியுள்ள கருத்தாகும். அக்காலத்தை சுமார் கி.மு. 5000 – வருடங்கள் என்று நிறுவுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் சித்திர எழுத்துக்களையே பயன் படுத்திவந்தனர். அது போல் வேதகாலத்தில் வேதங்களை இயற்றிய ரிஷிகள் தங்களின் கருத்துக்களை மனப்பாடம் செய்து வாய்மொழியாகவே ஒருவரிடம் இருந்து இன்னொருவரும் அறிந்து கொண்டனர் இது போல் தமிழிலும் பழைய நூல்கள் யாவும் வசன நடையில் இல்லாது பாடலாக இருப்பதற்கு காரணம் பாடல்களை எளிதில் மனதில் பதியவைக்க முடியும் என்பது தான்.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சிந்து நதிப் பள்ளத்தாக்கில் அஸிரியருக்கு ( மெசபடோமியா வாழ்வினர் ) சமகாலத்த வராகிய ஒருநாகரிக ( திராவிட ) இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் நிலப்பிரபுத்துவ சமுதாயம் ஆப்கானிஸ்த்தானுக்குள் நுழைந்து கொண்டு இருந்த தந்தை வழிச் சமுதாயத்தவரான ஆரியர்களைவிட உயர்ந்த நிலையிலிருந்தது. முரடர்களும், போர்வீரர்களுமான ஜெர்மானியர்கள் நாகரிகமும் பண்பாடுமுள்ள ரோமானியர்களையும் அவர்களுடைய பெரும் சாம்ராஜ்ஜியத்தையும் கி.பி. நான்காம் நுற்றாண்டில் அழித்து விட்டதைப் போலவே ஆரியர்களும் சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்திருந்த மக்களை தோற்கடித்து அங்கே கி.மு. 1800 வாக்கில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். இதே காலத்தில் சிறிது ஏற்றத் தாழ்வுடன் மேற்கிலும் இந்திய ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரான கிரேக்கர்கள் கிரீஸில் வாழ்ந்து கொண்டு இருந்த பழங்க்குடியினரைத் தோற்கடித்துத் தமது ஆட்சியை நிலைநாட்டினர். ஒரே சமயத்தில் பலநாடுகளில் மனித சமுதாய வளர்ச்சி ஒரேவிதமாக இல்லாவிட்டாலும் இந்திய ஐரோப்பிய இனத்தின் இரு பிரிவினர்களான கிரேக்கர்களும் ஆரியர்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியடைந்தைக் கவனிக்கலாம். பிற்காலத்தில் அவ்வளர்ச்சி வேறுபட்டது என்பதும் உண்மைதான். அவர்களின் ஒரு முக்கியமான வேற்றுமையை இங்கே குறிப்பிடவேண்டும் காலம் செல்லச் செல்லச் இந்திய ஆரியர்களின் வளர்ச்சி தடைப்பட்டு நின்றுவிட்டது. அதனால் அவர்களது சமுதாய அமைப்பையே இளம்பிள்ளை வாதம் தாக்கி விட்டது போல் அவர்களின் சமுதாயம் பிணமாகி விட்டது. இன்று அது நாலாயிரம் ஆண்டுகளில் புரிந்த முட்டாள் தனங்களின் காட்சி சாலையாக இருக்கிறது. ஆனால் கிரேக்க சமுதாயம் சூழ்நிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருந்தது இன்று நன்குபடித்த இந்தியர்களும் கூட வேதங்களையும், உபநிசத்துக்களையும் இயற்றிய ரிஷிகளையும், முனிவர்களையும் எல்லையற்ற காலத்துக்கு முன்பே எல்லாவற்றையும் சிந்தித்து தத்துவங்களைக் எடுத்துக் கூரிய மேதைகளாக கருதுகிறார்கள். ( இது மட்டும் அல்லாது ஆரியத்தை உயர்த்திப்பிடிக்கும் உத்தியாக ஒரு கூட்டாத்தினர் இப்போது எந்த தத்துவங்கள் ஆகட்டும் வேறு விஞ்ஞான கருத்துக்கள் ஆகட்டும் இவை எல்லாம் முன்பே வேதங்களிலும் ரிசிகாளாலும் சொல்லப்பட்டதாக சொல்வது அவர்கள் செயலாகும்.) ஆனால் இன்றைய ஐரோப்பியப் படிப்பாளிகள் கிரேக்க தத்துவ ஆசிரியர்களான பிளாட்டோவையும் அரிஸ்டாட்டட்டிளையும். தத்துவ இயலை சிறப்பாக ஆரம்பித்து வைத்துவர்களாகக் கருதினாலும் அவர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து விட்டதாகவோ நினைப்பது இல்லை.
இந்த நுற்றாண்டின் முதல்பாகத்
துவக்கத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கிடைத்த சிதைவுகளினால் சிந்து பள்ளத்தாக்கின்
சிதைவுகளும் நாகரிக வாழ்க்கையின் மிச்ச சொச்சங்களும் காணக் கிடைத்தன. அங்கு
கிடைத்தவற்றிலிருந்து மெசபடோமியாவின் பழைய நாகரிக இனத்தாரைப் போலவே சிந்துப்
பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்களும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் இருந்து வந்ததாக
தெரிய வருகிறது. அவர்கள் விவசாயமும் கைத் தொழில்களும் வணிகமும் செய்து வந்தனர்.
தாமிர யுகத்திலும், பித்தளையுகத்திலும் அவர்கள் வாழ்ந்தாலும் எவ்வளவோ வளர்ச்சி
அடைந்து இருந்தனர். சித்தர எழுத்துக்களையும் மற்ற முத்திரைகளையும் இதுவரையிலும்
பூரணமாக படிக்க இயலாவிட்டாலும் சிந்து நாகரிகம்
அசுர நாகரிகத்திற்கும், கால்திய நாகரிகத்திற்கும் சமகாலத்திய தென்றும் .
அவற்றின் கூடபிறந்த நாகரிக மென்றும் அவர்களுடையவை போன்ற மதக் கருத்துக்களையே
கொண்டிருந்தார்கள் என்றும் மற்ற ஆய்வுகளால் தெரிகிறது. சிந்துமக்கள் லிங்கத்தையும்
மற்ற கடவுள் சின்னங்களையும், விக்ரகங்களையும் வழிபட்டு வந்தாலும் அவர்களிடையே
தத்துவ சிந்தனை இருந்ததாகத் தெரியவில்லை.
இருந்திருந்தால் ஆரியர்களுக்கு முதலிலிருந்தே தத்துவச் சிந்தனையை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. ( ராகுலின் இக் கருத்து எனக்கு சரியாக தெரியவில்லை உலகில் ஆண் + பெண் இணைப்பே இனவிருத்திக்கு காரணம் என்ற கருத்தியலை வெளிப்படுத்தவே சிந்து வெளி மக்கள் குறிவழிபாட்டினை கொண்டு இருந்தார்கள் என்றால் அது சிறந்த தத்துவக் கருத்தாகும். இவ் வழிபாடு இன்றும் சிவலிங்க உருவத்தில் மட்டும் அல்லாது தமிழக பெண்கள் ஒவையார் நோன்பு என்று ஒருவித வழிபாட்டினை செய்து வருவது உண்டு இதன் முக்கிய அம்சம் குறி வழிபாடாகும். ) மற்றும் ஆரியர்களின் இலக்கியமும் காலமும் என்ற அடுத்த பகுதியில் கடைசிப் பாராவில் கிழ்க்கண்டவாறு சொல்கிறார். சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் மெசபடோமியா, எகிப்து மக்களைப்போல் தனித்தனிக் கடவுள்களை வழிபட்டனர் கடவுள் விக்கரகங்களும் அடையாளங்களும் தோன்றின. ஆனால் ஆரியவர்த்த ஆரியர்களுக்கு இவை எல்லாம் பிடிக்கவில்லை குறிப்பாக அவர்கள் சிந்துப் பள்ளத்தாக்கு மக்களின் லிங்க வழிபாட்டை வெறுத்தனர் “ஆண்” குறியைத் தொழுபவர்கள் என்று அவர்களை கேலி பேசினார்கள் ஆரியர்களுடைய கடவுள்கள் இந்திரன், வருணன், சோமன், மேகம், போன்ற இயற்கை சக்திகளேயாகும்என்று சொல்கிறார். இக்கருத்தை திருவள்ளுவ நாயனாரும் ஆண் + பெண் இணைப்பு குறியீடான (ஆவுடை என்பது பெண் குறியையும், அதன் மேல் நிற்கும் லிங்கம் எனப்படும் நீள் உருளை வடிவு ஆண்குறியையும் குறிப்பதாகும்) ஆவுடையார் கோயில் குறிப்பரியார்கள் என்று சொல்கிறார். இக் கருத்தின் தாக்கமே சித்தர்களின் பாடல்களில் அனைத்திலும் நாத, விந்துக்களின் இணைப்பு உலக உற்பத்திக்கு காரணம் என்று சொல்கின்றனர் மற்றும் தமிழர்கள் இயற்கை சார்ந்தும் மாந்தனின் வாழ்வியலுக்கு அத்தியாவசியமான பொருள்களையும் அதனைக் காத்த அல்லது அவர்களுக்கு உதவிய மாந்தர்களையும் தெய்வங்களாக கருதினார்கள். இன்றும் வயக்காட்டுப் பக்கங்களில் வாய்க்கால் ஓரத்தில் வாய்க்கால் கரையான் என்றும் மதகடியான் என்றும் தெய்வங்களை வைத்து வழிபடுவதைப் பார்க்கலாம். வாய்க்காலைக் காப்பாற்றக்கூடிய இறைவன் என்றும் மதகுகளைக் காப்பாற்றக்கூடிய இறைவன் என்றும் அதனைக் காவல் காத்த மாந்தர்களை தெய்வங்களாகக் வழிபட்டனர். இன்றும் சில பகுதிகளில் மதகடியான், வாய்க்கால்கரையான் போன்ற பெயர்கள் வழங்கி வருகின்றனர். இவ்வாறு தமிழர் வாழ்வியலில் உள்ள தெய்வங்கள் பெயர்கள் பொருள் பொதிந்தும் உள்ளது. முருகன், பெருமாள், கண்ணன் என்ற பெயர்கள் வடநாட்டில் இல்லை அவர்கள் ஸ்கந்தன் ( ஸ்கந்தம் என்றால் விந்து என்றும் விந்தன் விந்தில் இருந்து பிறந்தவன் என்பதை ஸ்கந்தத்தில் இருந்து பிறந்தவன் ஸ்கந்தன் என்பது வழக்கில் கந்தன் என்றும் கார்த்திகேயன் சுப்பிரமணியன் என்றும்தான் உள்ளதே தவிர முருகன் என்ற பெயர் இல்லை) தமிழர்கள் தங்கள் தெய்வங்களாக தங்களுக்கு உதவிய அவசியமானவற்றைக் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாக பிரித்து அதன் அமைப்பியல், அதன் விளைவியல் அங்கு வாழும் சூழ்நிலையைக் கொண்டு வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் வாழ்வியல் நாடோடிகளாக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அடிக்கடி இடமாற்றம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள் சிந்து சமவெளிக்கு வந்தபின்புதான் அங்கு வாழ்ந்த திராவிட இனத்தாரின் வாழ்வியல் அமைப்பினைக் கண்டபின் நிலைத்து வாழ முற்பட்டுள்ளனர். அவர்களின் ரிக்வேதத்தில் நிலத்தில் உள்ள எதிர்ப்பாளர்களைக் தஸ்யுக்கள், என்றும் காற்றிலும் நீரிலும் உள்ள நோய்களை உண்டாக்கும் சிறிய உயிரினங்களை ருத்திரன்கள் என்றும் அதனை அக்கினியே அழிப்பாயாக என்று வேண்டுதல் செய்தனர். பிற்காலத்தில் வந்தவர்கள் ருத்திரனை சிவனாக்கியும் முருகனை சுப்பிரமணியனாக்கியும் பலவித மாறுபாடுகளை செய்தனர். ரிக்வேதத்தின் பழைய மந்த்ரங்களில் இந்திரன், சோமன், வருணன்,ஆகியவர்களை பற்றி மிக உயர்வாக பாடியிருந்தாலும் அக்காலத்தில் ஒரேயொரு கடவுளை சர்வவல்லமை படைத்த இறைவனாக கருதும் எண்ணம தோன்றவில்லை. ஒருகடவுளுக்கு புகழஞ்சலி செலுத்தும் ரிசியானாவர் அந்தக் கடவுளையே எல்லாக் செயலுக்கும் காரணம் என்று சொல்லிவிடுவார். ஆனால் ரிக்வேத கடைசி மந்திரங்களை நோக்கினால் பல கடவுளை நம்பும் மாற்றத்தைக் காணலாம். எல்லாக் இனத்தவரின் கடவுள்களிலும் அந்தந்த இனத்தாரின் சமுதாயப் பிரதிபலிப்பைக் காணலாம். கடவுள்களைப் பற்றி ஆராயும்போது பிராமணர்கள் பிர்மாவை ஆண்பாலக கருதி வந்தனர் பின்னர் உபநிசத்துக்களின் காலக் கட்டத்தில் பதவி உயர்வு பெற்று ஆண்,பெண் தன்மையற்று அனைத்துக்கும் உயர்வான பிரம்மம் என்ற சக்தியாக கருதப்பட்டது. அனைத்துக் கடவுள்களுக்கும் அதிபரான பிரம்மா ரிக்வேதத்தின் கடைசிப்பகுதியான பத்தாவது மண்டலத்தில் பிரஜபதியான இவரைக் குறித்து கீழ்க்கண்டவாறுசொல்லப்பட்டு உள்ளது.
“
தங்க கர்ப்பமுடயவன் முதலில் இருந்தான் அவன் பஞ்சபூதங்களின் ஒரே தலைவனாக இருந்தான்
அவன் நிலத்தையும், வானத்தையும் சுமந்திருந்தான் நாங்கள் அந்த தேவருக்கு வேள்விப்
பொருள்களை அர்ப்பணிக்கிறோம்.”
ஆத்துமா
உடலில்ருந்து தனியாக இருக்கக் கூடியது என்று வேதங்களை இயற்றிய ரிஷிகள் நம்பி
வந்தனர். ஆன்மா மரம், செடி, விண்வெளியில் உள்ள சூரியன், சந்திரன்
ஆகியவைகளில்ருந்து நம்மிடம் புறப்பட்டு வரவேண்டும் என்று ரிக் வேதத்தின் ஒரு
மந்திரம் சொல்கிறது. நாம் காணும் உலகத்துடன் மறொரு உலகம் இருக்கிறது என்றும் அங்கே
நல்ல செயல்கள் செய்தவர்கள் ( சொர்க்கம்) இறந்தபின் இன்பமாக வாழ்கிறார்கள்.
தீச்செயல் செய்தவர்கள் பூமிக்கு கீழ் உள்ள இருள் உலகத்தை ( நரகம் )அடைந்து துன்பம்
அனுபவிக்கிறார்கள் என்றும் நம்பினார்கள். பிரம்மம் பற்றி தைத்திரிய உபநிஷத்தின்
சொல்படி முதலி உலகம் ஒன்றுமே இல்லாமல் இருந்தது . “ முதலில் ஒன்றுமே இல்லாமல் தான்
இருந்தது அதில் இருந்து இருப்பது என்பது தோன்றியது அது தன்னைத்தானே படைத்துக்
கொண்டது. அதனாலேயே அதை (உலகத்தை) சுக்ருத் (நன்கு படைக்கப்பட்டது) என்று
சொல்கின்றனர். இக் கருத்துப்பட திருவள்ளுவ நாயனார் ஞானவெட்டியானில் கீழ்க்கண்டவாறு
சொல்கிறார்.
சதசிவசாம்புவனால்
ஜெகந்தானேபடைத்து உயிருண்டாச்சு
இதானவாறு
அறிந்திடிலோர் புவிஎழுவகை தோற்ற
நால்யோனியுமே
தாகமத்தின் உற்பத்தியால்
பரசோதி
யொளிவில் சுயம்பதுவாய்
நிதானமாவ
தெறும்பு கடையானை
யாவதுவே
முன்பின் அனேகஉயிர் விதங்களான
பல
விந்துநாதமது விளைவானது கான்
ஞானவெட்டியான் – 163
இக்
கருத்தையே திருமூலர் சொல்வதைப் பார்ப்போம் பரம்பொருளே பலபொருளாகியும், பல
உயிர்களாகியும் அனைத்துமாய் இருக்கிறது.
தானே
திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே
உடல்,உயிர், தத்துவமாய் நிற்கும்
தானே
கடல்,மலை,தாபரமாய் நிற்கும்
தானே
உலகில் தலைவனும் ஆமே
:- திருமந்திரம்
இவர்களுக்கு
முன் வாழ்ந்த தொல் காப்பியர் இந்த உலகத்தின் தோற்றத்தைப் பற்றியும், உலகிலுள்ள
உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து அறிவுபூர்வமாகத் தொகுத்து மரபியல்
எழுதியிருக்கிறார். நிலமும், நெருப்பும், நீரும், காற்றும், விண்ணும் கலந்த தொரு
மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று.இவையாவும் ஓர் எல்லைக்குட்பட்டு இயங்கிக்
கொண்டு இருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
நிலம்
தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த
மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை
அய்ம்பால் இயல்நெறி வழாமைத்
திரிவுஇல்
சொல்லொடு தழாஅல் வேண்டும்
:- தொல்- மரபியல் 1589
இவ்வுலகம்
நிலம், நீர், தீ, காற்று, வான் என்ற ஐம்பூதங்களின் கலவை ஆகும். என்று மிக
கருத்தோடு சொல்லியுள்ளார். கி.மு. 3102 இல் இந்தியாவில் இருந்தவர்கள் எழுத்தைக்
கண்டுபிடிக்கவில்லை. வேதங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவே படிக்கப்பட்டு
வந்தது. “எழுது” என்ற வினைச் சொல் வேத காலத்தில் இருக்கவில்லை.
வேதங்கள் எப்போது எழுத்துருப் பெற்றன என்பதில் ஒருமித்த கருத்து காணப்படவில்லை.
கிறிஸ்த்து பிறப்பதற்கு முன் பின்னாக இருக்கலாம். கி.மு. 1000 ஆண்டளவிலேயே
ஆரியர்கள் சிறிது நாகரிகம் அடையத் தொடங்கினார்கள். இதுவே ருக் வேதத்தின்
காலமாகும். கெளதமபுத்தர் கி.மு. 563 ல் பிறந்தார் தனது 35 வது அகவையில்
பரிநிருவானம் அடைந்தார் ஆனால் அவரது போதனைகள் பவுத்த தேரர்களால் மனப்பாடம்
செய்யப்பட்டு வாய் மொழியாக போதிக்கப்பட்டு வந்தது. கி.மு. 29 ல் இலங்கையில் கூடிய
நான்காவது பவுத்த மாநாட்டிலேயே புத்தரின் போதனைகள் பாலி மொழியில் எழுதப்பட்டு அதற்கு திரிபீடகம்(மூன்று
கூடை) எனப் பெயர் சூட்டப்பட்டது.
அசோகன் (கி.மு.268-232) காலத் தூண்களிலும்,
பாறைகளிலும் பொறித்த கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் எழுதப்
பட்டதாகும். ஜேம்ஸ் பிரின்செப் (1850) என்பவரே முதன் முறையாக இந்தக் கல்வெட்டு
வாசகங்களின் பொருளைக் கண்டு பிடித்தவர். இவர் ஒரு கட்டடக் கலைஞர் ஆனால் நாணயங்கள்
பற்றித் தெரிந்திருந்த ஒரு நிபுணர். இதுவே அவருக்கு அசோகன் கல்வெட்டைப் படிக்க
வழிவகுத்தது. மாக அலெக்சாண்டர் (கி.மு.356-323) எகிப்து பாரசீகம் வழியாக இந்தியா
மீது படை எடுத்து வந்து காந்தாரம் மற்றும்
பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார். அவரும் அவர் வழிவந்த மன்னர்களும் கி.மு. 200ல்
தொடங்கி கி.பி. 25வரை ஆண்டார்கள் அப்போது அவர்கள் நாணயங்களை வெளியிட்டார்கள்.
அவற்றில் ஒரு பக்கத்தில் அவர்களது கிரேக்க மொழியிலும் மறுபக்கத்தில் இந்திய
மொழியான பிரகிருதத்திலும், பிராமியிலும் வெளியிட்டனர். இதை வைத்தே பிராமி
எழுத்துக்களின் ஒலி அமைப்பை ஜேம்ஸ் பிரின் செப் கண்டுபிடித்தார்.
பவுத்த தேரர்களும் சமண முனிவர்களும்மே பிராமி
எழுத்தை கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் அறிமுகப் படுத்தினார்கள். அசோகனது
பிராமி எழுத்துக்களே தேவநாகரி உட்பட பல இந்திய மொழிகளின் எழுத்துருவுக்கு
வழிகோலியது என சொல்லப்படுகிறது. பாண்டிநாட்டு மலைக் குகைகளில் பிராமி கல்வெட்டுக்கள்
காணப்படுகின்றன. இவற்றின் மொழி தமிழாகவும் எழுத்து மட்டும் பிராமியாகவும் உள்ளன.
பிராமியின் நுழைவினால் தொல்காப்பியர் காலத்து தமிழ் எழுத்து மறைந்து வட்டெழுத்து
வளர்ச்சி பெற்றது. இதனை தாமிழி என்று அழைக்கின்றனர்.
தமிழர்களுடைய கல்வி, கலை, பண்பாடு
முதலியன மூவேந்தர்கள் ஆண்ட சங்ககால முற்பகுதியில் மிகவும் சிறப்புற்று விளங்கியது.
புலவர்களில் ஐம்பதுக்கும் அதிகமான பெண்பால் புலவர்கள் இருந்துள்ளனர். இது அவர்கள்
சமசீராக இருபாலரும் கல்வி கற்றதையும் பெண்கள் தனிமைப் படுத்தவில்லை என்பதையும்
காட்டுகிறது. பிறப்பின் அடிப்படையிலான சாதி (வருண) வேற்றுமை சங்க காலத்தில் இல்லை
(சித்தர் நூல்களில் சாதிகளை பற்றியும் பெண்களில் சித்தர்கள் இல்லாததும் பெண்களை
மிக வெறுத்துக் சொல்வதும் இல்வாழ்க்கை வெறுத்தாலும் உள்ளதால் சித்தர்களின் தமிழ்
மொழி நடை சொல் கையாடல் போன்றவை பிற்கால வழக்குநிலையைக் காட்டுகிறது. திருமூலரின்
திருமந்திரத்தில் வரும் சொல்களை விட மற்ற சித்தர் நூல்களில் வரும் சொல்களின்
மாற்றங்களைக் குறிப்பிடலாம்.) இது போல் வரலாற்றில் பிற்காலத், தமிழரசர்கள் யாரும்
தமிழ்மொழி படிக்கவும் தமிழ் கலைகள் கற்கவும் கல்விச்சாலைகள் கட்டினதாகவும்
தோற்றுவித்தற்கான செய்திகள் இல்லை மருத்துவ மனைகள் மருத்துவம் பற்றிய செய்திகளோ
சொல்லும்படியாக இல்லை. கிழ்கண்ட சில கல்வெட்டுக்களில் இருந்து சில மருத்துவ
சாலைகள் இருந்தது தெரிய வருகிறது. அதுவும் கி.பி. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிற்பட்டதாக
உள்ளது. அவை வருமாறு.
பொருவேலூர்
:- தென்னர்க்காட்டைச் சேர்ந்த பெருவேளுரில் வேதமும்,சாத்திரமும் வல்ல 10 பட்டர்,
ஒரு சிவாச்சாரியார், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு 12 வேலி நிலமும் குடியிருக்கக்
வீடுகளும் கொடுக்கப்பட்டதாக இரண்டாம் குலோத்துங்கசோழன் 13 ஆம் நுற்றாண்டு
கல்வெட்டு குறிக்கிறது.
திருமுக்கூடல்
:- திருமுக்கூடல் (நெல்லை நாட்டு முக்குடலில் வீர ராசேந்திரன் கல்வெட்டொன்று
(1067) மருத்துவசாலை இருந்தாக குறிக்கின்றது. இதில் மருத்துவசாலையில் ஒரு அறுவை
மருத்துவரும், மூலிகை கொணரிகள் இருவரும் இருந்ததாகவும், 15 – படுக்கைகள்
இருந்தாகவும் கல்வெட்டுக் குறிப்பு கூறுக்கிறது.
திருவாடுதுறை
:- திருவாடுதுறையின் ஒரு மடத்தில் ஒரு மருத்துவ பள்ளி நடை பெற்று வந்ததாக விக்கிரம
சோழன் 3 (1121) ஆண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது. இதில், மருத்துவம்,வாகடம்,
ரூபாவதாரம், வியாகரணம் என்பன அங்கு கற்பிக்கப் பட்டன என்றும் கூறப்படுகிறது.
மற்றும் நமது தொல்லியல்துறையில் திரு நாகசாமி அவர்களால் சுமார் 25000 ம்
கல்வெட்டுப் படிமங்கள் எடுக்கப்பட்டதில் 5000 ம் அளவிலேயே படித்து அறியப்பட்டதாக
தெரிகிறது. பாக்கி உள்ளவைகளையும் படித்து அறிந்தால் இன்னும் மருத்துவ செய்திகள்
இருக்கலாம்.
மற்றும் நான் முன்பகுதியில் திருமூலர்
திருமந்திரத்தில் மண்டலங்கள் பற்றிய செய்தி வருவது பற்றி சொல்லியிருந்தேன்.
மண்டலம் என்ற பிரிவு கி.பி. 1009 ஆண்டில் தான் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் நாட்டில் முக்கிய நாடுகள் மண்டலங்களாக பிரித்து பெயரிடப்பட்டன. தொண்டை நாடு
ஜெயங்கொண்ட மண்டலம் என்றும் நுளம்பாடி நிகரிளிச் சோழமண்டலம் என்றும் ஈழம்
மும்முடிச் சோழமண்டலம் என்றும் கொங்குநாடு வீரசோழ மண்டலம் என்றும்
பெயரிடப்பட்டன.முதல் இராசராசன் காலத்தில் சோழ அரசு பேராசாக உருப்பெற்ற பொது
நிர்வாக வசதிக்காக இவ்வாறு பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. கொழுமம் குமரலிங்கம்
கல் வெட்டுகளில் மூன்று மண்டலங்கள்
சொல்லப்படுகிறது. அவை கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் என்பன ஆகும்.
இவை சோழர் கல்வெட்டில் கி.பி. !009 ல் வருவதை பார்க்கலாம்.
சோழன் ராசசுயம் வெட்ட கோப்பெரு
நற்கிள்ளி பாண்டியன்பல்யாக சாலை முதுகுடுமிப் பேரு வழுதி தலையானங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் சேரன் செங்குட்டுவன் சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதான் தகடூர்
எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முதலிய மன்னர்கள் வேள்விகள் செய்ததையும்
பார்ப்பனர்களுக்கு எடைக்கு எடை பொன்,வெள்ளி என்றும் கால்நடைகளையும் பெண்டிர்களை
அள்ளிக் கொடுத்ததையும் புறநானூறு, போன்ற சங்க நூல்கள் சொல்வதையும் மகாபாரதம் போன்ற
இதிகாசங்கள் எடுத்துக் சொல்கின்றனவே தவிர மருத்துவத்திற்கான வராலாறுகள் இல்லை.
ஆரியர்கள் வருகையால் சாதிபிரிவுகள் தமிழ்ச் சமுதாயத்தில் தலை எடுத்தன. அதன் பின்
கல்வி கற்றல் தேய்வுற்றது, மருத்துவம், கணிதம் இசை நடனம் போன்ற கலைகள் சில
குடும்பங்களில் தலை முறையாக் பயிலப்பட்டு வந்தது.
இந்து மதம் என்பது வேதக்கருத்துக்களை
ஏற்றுக்கொண்ட சைவம், வைணவம், காணபத்தியம், சவுரம், கொளமாரம், சாக்த்தம் போன்ற
பல்வேறு சமயங்களுக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயராகும்.
சைவசமயத்துக்கு நால்வேதங்கள் பொது நூலாகவும் 28 ஆகமங்கள் சிறப்பு நூலாகவும் அமையும்
அவை சிவபெருமானாலேயே அருளப்பெற்றன என்பது சைவசித்தாந்ததின் அடிப்படை கொள்கையாகும்
இதுபோல் வைணவர்களுக்கு விட்னுவின் அருளாலேயே எல்லாம் அருளப்பட்டது என்ற கொள்கை
அடிப்படையாகும் இது போல் ஒவ்வொரு மதமும் அதன் தலையாய கடவுளையே முதன்மைப் படுத்தி
பேசுகின்றன ஆரியர்களுக்கு வேதம் சார்ந்ததும் திராவிடர்களுக்கு வேதம் சாராததும்
ஆகும் ஆரியர்க்கு நிகமமும், திராவிடர்க்கு ஆகமமும் உரியது ஆகும். பூசையை
அடிப்படையாகக் கொண்ட தமிழரின் வேதம் சாராத இறை வழிபாட்டு முறை ஆகமாம் ஆகும்.
ஆரியர்களது வேள்விச்சடங்க்குகள் அடங்கியது நிகமம் என்றும் சொல்கிறார்கள். இன்றும்
கிராமக் கோயில்களில் வழிபாடு செய்கின்ற தமிழர்களை பூசை அடிப்படையாகக் கொண்டு
பூசாரிகள் என்றுதான் அழைக்கின்றனர். பிராமணர்களை அவ்வாறு அழைப்பதில்லை. ஆனால்
இன்று ஆரிய வழிபாடும், திராவிட வழிபாடும் இரண்டும் கலந்து விட்டன.
நாம் ஐம்புலன்களின் வழியாகத்தான் எதையும்
நிர்ணயிக்க, கருத சொல்ல முடியும். கண்ணில் காணாத, ஐம்புலன்களுக்கும் உட்படாத
பரப்பிரமம் (கடவுள்) ஒன்று மட்டுமே உண்மை மற்றவை எல்லாம் மாயை, உலகம் மாயை வாழ்வு
பொய் எல்லாம் அவன் செயல் நம்மால் ஆவது ஒன்றும் மில்லை என்ற மத தத்துவங்கள் மக்களை
செயலற்று இருக்கச்செய்தன. இவ்வாறான சமயதத்துவங்களுக்கு எதிராக தோன்றிய இயற்பியல்
வாத சிந்தனையே பொருள் முதல் வாத தத்துவமாகும். இந்திய உபகண்டத்தில் பொருள் முதல்
வாதத்தைச் சார்ந்த, கருத்து முதல் வாதத்தைச் சார்ந்த என்று பல் வேறு தத்துவப்
பிரிவுகள் தோன்றின. பிராமண ஆதிக்கமும் வேத மதமும் ஆன்மீக வாதமும் வலுவடைந்த உபநிடத
காலத்தில்தான் முற்பிறப்பு, மறுபிறப்பு, கர்மவினை, தலை எழுத்து, நரகம், சொர்க்கம்
போன்ற தத்துவங்கள் பரவத் தொடங்கின அவற்றை எதிர்த்து உலோகாயாத வாதம் தோற்றம்
பெற்றது. உலோகாயாத வாதம் என்பது உலகையும் மக்களையும் அடிப்படையாகக்கொண்ட பொருள்
முதல் வாத தத்துவம் ஆகும். இத்தத்துவத்தைப் பரப்பியவர்கள் உலோகாய வாதிகள் அல்லது
சாருவாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாருவாகம் என்றால் அழகாகப்
பேசக்கூடியவர்கள் என்பது பொருள்.
பிரகஸ்பதி என்பவர்தான் இந்த உலோகாய வாத
தத்துவத்தின் ஆசிரியராவார். இவர் அசுரர்களின் குரு என வைதிக மதவாதிகளால்
இகழப்பட்டனர். ( சுரர் என்பது சுராபானம் என்னும் மது குடிப்பவர்கள் பிராமணர்கள்
ஆவர். சுராபானம் குடிக்காதவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.) உலோகாய
வாதிகள் பொருளே எல்லாவற்றுக்கும் முதல் என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே என்றும்
சொன்னார்கள். கடவுள், சொர்க்கம், நரகம்
போன்ற பொருளற்ற கொள்கைகளுக்குச் சான்று இல்லை என்றார்கள். உயிரின் உண்மைப்பொருள்
உடல் மட்டுமே ஆன்மா என்பது மாயை தவிர வேறு வேறு ஒன்றும் இல்லை எனக்குச்
சொர்க்கத்திலும் மோட்சத்திலும் நம்பிக்கை இல்லை இன்னொரு உலகில் ஆன்மா வாழும்
என்பதை நான் நம்ப விலை என பிரகஸ்பதி சொன்னார். இதனால் உலோகாயதத்தைப்
பின்பற்றுபவர்கள் பொருள் முதல் வாதிகள் என அழைக்கப்பட்டனர்.
சமணமும், பவுத்தமும் வேதத்தில் காணப்படும்
வருணாச்சிரம தருமத்துக்கும் எதிராக எழுந்த சமயங்கலாகும் இந்த சமயங்கள் அன்பு உயிருக்கு ஊறுகள் செய்யாமை நல்ல
எண்ணங்கள் நற்செயல்கள் முதலியவற்றைப் போதித்தன, மந்திரம் சடங்கு வேள்வி போன்ற
வற்றால் பலன் இல்லை என்றன. வேதவழி பாட்டில் முக்கிய இடம் பெரும் யாகங்களில்
மிருகங்கள் பலியிடப்படுவதைக் கண்டித்தன பவுத்தம் பிராமணர்களுக்கு உயர்வு முற்றாக
எதிர்த்தது பிறப்பால் யாரும் பிராமணர் ஆவதில்லை ஒருவனது செயலே உயர்வு தாழ்வைத்
தீர்மானிக்காது என்று கூறியது. ( இன்றும் பிராமணர்கள் உபநயனம் என்னும் சடங்கு
செய்தபின்பே பிராமணன் ஆகிறான் ) ஆரியர்கள் தங்கள் எதிரிகளை அளிக்க, பயனம்வெற்றிபெற,
மழைபெய்ய, உணவு, உயிர்ப்பலி போன்றவற்றை வழங்கி இந்திரன், அக்கினி, சோமன் வருணன்
போற தெய்வங்களை வேண்டிக் கொண்ட பாடல்கள் தான் ருக் வேதமாகும் அதில் இருந்து
தொகுக்கப்பட்டவையே யசுர், சாமம், அதர்வணம் என்ற வேதமாகும். இவை எல்லாம் ஒரே
காலத்தில் தொகுக்கப் பட்டதல்ல அன்றைய ஆரியர்களின் சிந்தனை மற்றம் தங்களுக்குள்
அல்லது தங்கள் கருத்துகளுக்கு தோன்றிய எதிர் விளைவுகளுக்கு தக்கவாறு தங்களை
மாற்றிக் கொண்டு தொகுக்ப்பட்டதாகும். வேதகால ஆரியர்கள் போர்க்கடவுளான இந்திரன்
கருப்பு நிறத் திராவிடர்களை (தச்யுக்கள்)
சூழ்ச்சியால் கொன்று அவர்களை கொன்று கோட்டை கொத்தளங்களை அழித்தவன் என
ருக்வேதத்தில் போற்றப்படுகிறது. இன்றும் நாம் அவர்களின் பிற்கால நூல்களான
இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் போரில் நேர்மையாக வென்றதாக சொல்லப்படவில்லை
மறைந்து இருந்தும் எதிரியின் சகோதரர்களை பிரித்து சுழ்ச்சியாகத்தான் போரில்
வென்றதாக சொல்லப்பட்டு உள்ளதை பார்க்கலாம்.
மகாபாரதம் திரு கோசாம்பி அவர்களின்
ஆராய்ச்சியின் படி கி.பி. யில் எழுதப்பட்டு இருக்கவேண்டும் என்கிறார். இதில்
வழங்கும் சமஸ்கிருதம் கி.பி. மூன்றாம் நுர்றாண்டிற்கு உரியது என்று சொல்கிறார்.
மற்றும் ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் அவர்கள் பழங்கால சம்ஸ்கிருத வரலாறு (A Hitory of sanskrit literature ) என்ற நூலில் 40 வது பக்கத்தில் பாண்டவர்களும்
கவுரவர்களுக்கும் நடை பெற்ற போர் மாகபாரதத்தில் பிரதானமாக சொலப்பட்ட செய்தியாகும்.
அந்தபோரைப் பற்றி வேதங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. என்று சொல்கிறார். அது போல்
வேத இலக்கியங்களில் கெளரவர்கள் பற்றிய குறிப்பு வருகிறதே தவிர பாண்டவர்கள் பற்றிய
குறிப்பு எதுவும் இல்லை. வேத இலக்கியங்களில் பரதவர்கள், குருஸ் என்ற கவுரவர்களின்
பெயர்கள் அடிக்கடி வருகின்றனவே தவிர பாண்டவர்கள் பெயரே வரவில்லை.. இது போல்
பாணியின் இலக்கண நூலில் கூட பாண்டு என்ற பெயரோ இல்லை பாணினியின் இலக்கண நூல் கி’பி. 5 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இக் காரணங்களின்
படி பார்த்தோமானால் மகாபாரதக் கதையின் பிரதானமாணவர்கள் பாஞ்சாலி, தருமன்,
அர்ச்சுனன் போன்றவர்கள் சொல்லப்படவில்லையாயின் பிற்கால கதைகளாகும். ஏன் பிராமணர்களால்
போற்றிப் பாராட்டும் மகாபாரதம், இராமாயணம். போன்ற மனு தர்ம நூல்களை சித்தர்கள்
வெறுத்தார்கள் என்றால் கீழ்க்காணும் ஒழுக்கமில்லா நெறிகளை கூறுவதால் தான். ( சித்தர்களின்
மூடநம்பிக்கை எதிர் கூவலில் முன் பகுதியில் அவர்களின் பாடல்களை
குறிப்பிட்டுள்ளேன். ) மனு தர்மம் என்று போற்றப்படும் நூலிலும், சில புராண
இதிகாசங்களிலும் புத்திரன் இல்லாதவர்கள் ஆண் குழந்தைக்காக் மிக நெருங்கிய
உறவினர்களோ (தாய்,சகோதரி) அல்லது அதைத்தாண்டி யாரிடமோ உடல் உறவு கொண்டு புத்திரனை
பெற்றுக்கொள்ளலாம் இது தவறில்லை.( இராமன் பிறப்பு, பாண்டவர்கள் பிறப்பு )
மகாபாரதத்தில்
கூறப்பட்டுள்ளது :-
வைசம்பாயனர்
பரதசிரேஸ்டரே பாரதத்தைக் கேட்டபிறகு அவர்களை உத்தேசித்துச் சக்திக்குதக்கவாறு
பக்தியுடன் பிராமனர்களுக்குச் சிரார்த்தங்கள் கொடுக்கத்தக்கவை, மகாதானங்கள்
கொடுக்கத்தக்கவை அவை பலவித ரத்தனங்கள் பால் கறக்க வெண்கலப் பாத்திரங்களும் உடன்
கோக்களும் (பசு) நன்கு அலங்க்கரிக்கப்பட்டவர்களும் எல்லா இஷ்டங்களுடனும் குனங்களுடனும்
கூடியவர்களும், பலவித விமானங்களும்,விச்சித்திரமான வீடுகளும், பூமியும்,
வஸ்த்திரங்களும், சொர்ணமும், வாகனங்களும், குதிரைகளும், மதம் கொண்டயானைகளும்,
படுக்கைகளும் நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதங்களும் கொடுக்கத்தக்கவை. மற்றும்
எந்தெந்தச் சிறந்த தானம் இருக்கிறதோ அவையும், ஆத்மாவும்(உயிர்) மனைவியும்,
மக்களும் கொடுக்கத்தக்கவை.
ஸ்ரீ தேவி பாகவதம் இயற்றிய வியாசர் சொல்லும் தருமங்கள்:-
வைசம்பாயனர்
ஜனமேஜயனுக்கு கூறியது. கிருதயுகம் என்பது நான்கு யுகங்களில் முதல் யுகம் இந்த
தருமம் இரண்டு இடங்களில் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது. ஜமதக்கினியின் புத்திரரான
பரசுராமர் 21 முறை பூமியில் சத்திரியர்கள் (அரசர்கள்) இல்லாமல் கொன்றுவிட்டார்.
அதனால் சத்திரியப் பெண்கள் (அரசகுலப் பெண்கள்) புத்திரர்கள் இல்லாமல் வருந்தி
கணவன் இறந்து விட்டதால் பிராமனர்களைச் ஒவ்வொரு ருது காலத்திலும் தீவிரமான
நியமத்துடன் சேர்ந்தார்கள். பிராமணர்களால் ஆயிரக்கணக்கான சத்திரியப் பெண்கள்
கற்பம் தரித்த்னர் இதனால் அதிக வலிமையுள்ள சத்திரிய வம்ச குழந்தைகள் பிறந்தனர்.
இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களே தர்மமாக கூறப்பட்டுள்ளது.. இந்த யுகம் தான்
கலியுகத்தைவிட சிறந்ததாம். இன்னும் இதை விட கேவலமான செயல்கள்தான் இந்திரன்,
சந்திரன் தேவகுருபிரகச்பதி சிவன், பிர்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் செய்ததாக
பிராமணர்கள் எழுதிய இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றதில் சொலப்பட்டதை எல்லாம்
பார்த்துதான் சித்தர்கள் வன்மையாகச் சாடினார்கள்.
சித்தர்களின் கடவுள் தேடல் :-
சித்தர்களின் தேடலில் இவர்களுக்கு ஓர் உறுதுணையாக இருந்தது யோகநிலையாகும். நாம் ஒவ்வொருவரும் அகம், புறம் என்ற இருவித நிலைப்பாடுகள் உள்ளது. நமக்கு ஐந்து வித உறுப்புக்கள் உள்ளன இவைகளை கண், காது, மூக்கு, வாய், உடல் (தோல்) இந்த ஐந்து உறுப்புகளும் உடலுக்கு பலவழிகளில் உதவிசெய்கின்றன. கண் உடலுக்கு பார்வை என்ற செயலைச் செய்கிறது. மூளையானது இதன் வழியாக எல்லாப் பொருள்களின் உருவத்தை அறிந்து கொள்கிறது. இது போல் உடலின் மேற்கண்ட உறுப்புகளின் வழியாக அந்தந்த குணங்களை அறியலாம். இந்த உறுப்புகளுக்கு கருவிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவை சம்ஸ்கிருத வார்த்தையால் பஞ்ச இந்திரியங்கள்என்று (ஐந்துவித கருவிகள் ) அழைக்கப்படுகிறது. இந்த இந்திரியங்கள் மூலமாகத்தான் மனிதன் எதையும் அறிய முடியும். இந்த ஐந்து கருவிகளும் செயல் படவில்லை யாயின் எதனையும் மூளை உள்வாங்கவும் வெளியிடவும் இயலாது. ஒரு மரத்தை பார்க்கின்றிர்கள் இது தென்னை மரம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இது மரம் இது தென்னை மரம் என்று இந்த பொருளுக்கு பார்க்கிறவர்கள் அல்லது இவர்களுக்கு முன் உள்ளவர்கள் சொல்லிய காட்டிய செய்தி மூளையில் கண் என்னும் உறுப்பின் வழியாக பதியப்படுகிறது. பின் நாம் எப்போது அந்தப் பொருளைப் பார்த்தாலும் இது தென்னை மரம் என்று சொல்கிறோம். இந்த அறியும் செயலுக்கு அறிவு என்று சொல்லப்படுகிறது. இது கண், காது என்ற இரண்டு கருவிகளின் செயலால் பதியப்பட்டதாகும். இவ்விதம் அனைத்து பொருள்களும் அறியப்படுகிறது. ஒரு நறுமணம் அல்லது துர்மனம் அறியப்படுகிறது இதை மூக்கு என்னும் உறுப்பின் வழியாக அறியப்படுகிறது. இதையும் நாம் முனறிந்தவர்கள் அல்லது நம்மால் இந்த மனம் இது என்று சொல்லப்பட்டு அல்லது நம்மால் மூளையில் பதியப்பட்டு இருந்தால் தான் அறிய முடியும். இது போல் ஒரு ஒலி நம் காதில் வந்து அடைகிறது அது நம் மூளையில் பதியப்பட்டு இருந்தால் உடன் பாடல் அல்லது நம் முன் உள்ளவர்கள் பேசுவது அல்லது அந்த சத்தம் குருவியின் சத்தம் என்று அறியப்படுகிறது. அந்த ஒலி புதியதாக இருந்தால் அது வரும் பொருளில் இருந்து அதற்கு இன்ன பெயர் என்று பதியப்படுகிறது. பின் அந்த ஒலியை எப்போது கேட்டாலும் இதனுடையது என்று நம் மூளை நிர்ணயம் செய்கிறது. இதுபோல் நம் வாயில் உள்ள நாக்கு என்னும் உறுப்பில் உள்ள சில நரம்பு பகுதியில் ஒரு பொருள் பட்டால் அத்தன்மையை பதியப்பட்டு இருந்தால் உடன் இது காரம், இது புளிப்பு, இனிப்பு சொல்கிறோம். இது போல் திடீர் என்று உடல் நடுங்குகிறது, வியர்க்கிறது, உடன் இது குளிர்ச்சியால், உஷ்ணத்தால் என்று பிரித்து அறிகிறோம். இவை நம் உடலின் தோல் என்னும் உறுப்பினால் அறியப்படுகிறது.
இவையாவும் ஐந்து விதக் இந்திரியக்
கருவிகள் எனப்படும் உறுப்புகளின் உணர்வுகளின் செயல்களைக் கொண்டு ஐம்புலன்களின்
உணர்வுகளாக வெளிப்படுகிறது. இதில் சிலவற்றுக்கு ஒரு உறுப்பின் செயல்பாடு
போதுமானதாகவும் சிலவற்றுக்கு மற்ற தேவைப்படும் உறுப்புகளின் செயல்பாடுகளைக்
கொண்டும் அறியப்படுகிறது. இந்தக் கருவிகளின் உதவியில்லாமல் எதையும் அறிய உணர
சிந்திக்க முடியாது. ஆனால் மதவாதிகள் சொல்வது கடவுள் என்பது ஐம்புலன்களுக்கு
அப்பாற்பட்டது இவற்றின் செயல்களுக் அடங்காதது என்று சொல்கிறார்கள். இது எந்த
விதத்தில் அறியப்படும் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் பார்த்ததும் நமக்கு
அன்னை, தந்தை, ஆசிரியர் என்று பிறாரால் தெரிவித்த கருத்துக்களைக் கொண்டு தான்
மூளையில் பதியப்பட்ட விசயங்களின் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு
இருக்கையில் நம்மால் ஐம்புலன்களின் உணர்வுகளுக்கு கட்டுப்படாத ஒரு பொருளை எவ்வாறு
இது கடவுள் என்று புரிந்துகொள்ள முடியும். நாம் கண்ணால் பார்க்கப்படும் போது அந்த
பொருள் தெரிகிறது அதனை பார்த்து உணவுப் பண்டமா அல்லது வேறு பொருளா என்று பிரித்து
அறிகிறோம். இதற்கு நம் மூளையில் உள்ள நினைவாற்றலின் உதவி கொண்டு பிற இந்திரியக்
கருவிகளின் உதவி கொண்டு ஆகா இது லட்டு என்று அறிகிறோம் உடனே நம் நாக்கு இது
இனிப்பு பொருள் என்று முன் அனுபவத்தின் உதவி கொண்டு முடிவு செய்தவுடன் நாக்கில்
எச்சில் சுரக்க ஆரம்ம்பித்து விடுகிறது. அதுபோல் அது காரம், புளிப்பு என்றெல்லாம்
தீர்மானிக்கிறது. இவற்றின் முடிவுகள் எல்லாம் மூளையாகும். நீங்கள் பார்க்காத
அல்லது கேள்விப்படாத சுவைத்து அறியப்படாத ஒரு உணவுப்பொருளைக் கண்டு எவ்வித
தீர்மானங்களும் எடுக்க இயலாத நிலையில் நாக்கின் சுவை உணர்வுகள் வேலை செய்யாது.
மின்சார அதிர்ச்சியை ஒரு முறை அறிந்து இருந்தால் அல்லது அதன் குணங்களை பிறாரால்
சொல்லியிருந்தால் அந்த சாதனங்களை பார்த்தவுடன் எச்சரிக்கை உணர்வு எண்ணம
தோன்றுகிறது. நம்மிடையே ஐந்து குருடர்களின் கதை ஒன்று சொலப்படும் ஒருவன் யானையின்
துதிக்கையினைப் தொட்டுப்பார்த்தவன் இதற்குமுன் உலக்கையை தொட்டுப்பார்த்த
அனுபவத்தின் மூலமாக யானை உலக்கை போல் இருப்பதாக சொன்னான், இன்னொருவன் காலை
தடவிப்பார்த்துவிட்டு தூன்போல் உள்ளதாக சொன்னான். இன்னொருவன் காதைப்பிடித்து
பார்த்து விட்டு முறம் போல் இருப்பதாகவும் இன்னொருவன் வாலை பிடித்து
பார்த்துவிட்டு கயர்போல் உள்ளதாகவும் உடலைத் தொட்டு தடவிப் பார்த்தவன் சுவர்போல்
உள்ளதாகவும் சொன்னார்கள். இந்தக் கதையிலும் உண்மை உருவத்தை அவர்களால் சிந்திக்க
முடியாவிட்டாலும் கண் தவிர்த்த பிற நான்கு இந்திரியக் கருவிகளின் உதவிகொண்டு
அவர்களின் முன் தங்களாலலும் பிறராலும்
சொல்லப்பட்ட கருத்துக்களின் உதவிகொண்டு சொன்னார்கள். ஐந்து இந்திரியக் கருவிகளின்
ஒரு கருவியின் செயல் குறைவாலேயே ஒவ்வொருவரும் யானையின் உருவத்தை
தீர்மானிகிறார்கள். இது போல்தான் நாம் இன்றுவரைக்கும் கடவுள் கொள்கையில் ஒவ்வொரு
மதமும் தீர்மானிக்கின்றன. தற்காலத்தில் இந்துமதம் என்று சொல்லிக் கொள்ளும்
மதத்தில் சைவ மதத்தை சார்ந்த சங்கரரும், வைணவ மதத்தை சார்ந்த ராமாநுஞ்சரும், மத்துவச்சாரியாரும்
பிரமச்சூத்திரம் என்ற வேத வியாசர் எழுதிய ஒரு நூலுக்கு விளக்கம் எழுதியுள்ளனர். இதற்கு
கி.பி. 1200 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த
சங்கரர் உரை எழுதும் போது பிரமம் என்ற ஒரு பொருளே உள்ளது. ஜீவர்கள் (மனிதர்கள்)
பிரமமே ஆவர் நாம் கண்ணால் காணப்படும் உலகம், மற்றும் அனைத்து பொருள்களும் பிரமமே
என்றார். காணப்படும் அனைத்தும் கானல்நீர் போல் பொய்த்தோற்றமே (கானல் நீர் என்பது
நல்ல வெய்யில காலங்களில் வெட்ட வெளிகளில் நம் கண்ணுக்கு தூரத்தில் ஒரு ஆறு
இருப்பது போல் அதில் நீர் ஓடு வது போல் தோன்றும் அனால் அருகில் சென்று பார்த்தல்
அவ்வாறு இருக்காது இதை கானல் நீர் என்பர்) அதுபோல் இருட்டு நேரத்தில் சுருட்டி
வைக்கப்பட்ட கயிற்றை பார்த்து பாம்பு என்று கருதுவது போல் நாம் காணும் இந்த உலகம்
மாயயை இது அஞ்ஞானத்தால் தோன்றியது. ஒரு உருவம் பலகண்ணாடியில் பல உருவங்களாக பிரதி
பலிப்பது போல் ஒரு பிரமமே எல்லாவற்றிலும் உள்ளது என்று அத்வைத சித்தாந்தத்தை
சொன்னார். அடுத்து கி.பி. 1017 ல் வாழ்ந்த
இராமானுஞ்சர் என்பவர் மேற்க்கண்ட பிரமச் சூத்திரத்துக்கு விளக்கவுரை
எழுதினார் இதில் இவர் பரப்பிரமம் ஒருவரே அவர் சத்து என்றும் பிரமம் என்றும் விஷ்ணு
என்றும் பெயர் பெறுகிறார். சித்து + அசித்து சேர்க்கையால் விளங்கும் பிரமம்
இரண்டாக உள்ளார். அவர் சித்து என்னும் ஆத்மாவாகவும் அசித்து என்னும் ஆனாத்துமா
வாகவும் சேர்ந்து இருக்கிறார். ஆத்துமா என்றும் பரமாத்மா என்றும் இரண்டாக உள்ளது.
ஆத்மா எனப்படும் ஜிவாத்துமா அஞ்ஞானம் நீங்கி பரமாத்துமாவில் இணைந்தாலே முக்தி
என்று சொன்னார். இவரது விளக்கத்திற்கு விசிஷ்டாத்வைதம் எனப்படும் (விசிஷ்டம் –
விசேசம் ). அடுத்து மத்துவாச்சாரியார் இவர் பிரம சூத்திரத்திற்கு விளக்கம்
எழுதியுள்ளார் அதில் பரமாத்மா என்பது தனித்துவம் உள்ளது மற்றவை அதில் சேராதவை
பிரபஞ்சம் வேறானவை அதில் உள்ள ஜிவாத்துமா வேறு. பரமாத்துமா என்றும் உள்ளது
நிலையானது அதற்கு மேல் ஒன்றும் இல்லை எவராலும் உண்டாக்கப்படாதது. அனால் ஜீவாத்மா
வேறு இதற்கு பிறப்பு இறப்பு உண்டு உலகம் ஒரு பொய்த் தோற்றமல்ல சுதந்திரம் கடவுள்
ஒருவனுக்கே உண்டு. கடவுளும் உயிர்களும் எக்காலத்து எந்நிலையிலும் வேரானவர்களே.
இறைவனும் இறைவியும் எல்லா உயிர்களும் பிரமா முதலிய தேவர்களும் ஜிவர்களே.
அவர்களுக்கும் பிறப்பு, இறப்பு தூலதேகமுண்டு. கர்மம் தீர்ந்தால் முக்தி உண்டாகும்
என்று சொல்லியுள்ளார். இவரது கொள்கைக்கு துவைதம்
என்பதும். இவ்வாறு வியாசர் எழுதிய பிரம சூத்திரத்திர்க்கு மூவரும் மூன்றுவித
நிலைகளில் விளக்கம் அளிக்கின்றனர். இவை அல்லாது வைசேஷிகம் என்ற ஒருபிரிவினர் இக்
கொள்கையை வகுத்தவர் காணாதர் (இவரும் ஒரு சித்தராக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகிறது) என்பவர். உலகிற்கு முதற் காரணம் அணுக்களே
படைத்தல் என்பது பரமான்மா முக்குணத்தோடு சேர்ந்து நின்று செய்வதாகும்.
ஜீவான்மாக்கள் பலவாகும் இதன் தொழில் இந்திரியங்களையும் அவற்றின் தொழில்களையும்,
சுகதுக்கங்களையும் விடுவதாகும். நியாயம் :- இதனை இக்கருத்தினை கூறியவர்
அக்கபாதராவர் யுக்தி (யூகம்) இதன் அடிப்படையாகும். இந்த அடிப்படையில் தர்க்கம்
செய்து அதன் அடிப்படையில் அறிவது. யோகம் :- இதற்கான நூல் எழுதியவர் பதஞ்சலி
ஆவார் இவர் நந்தியின் சீடர் இதன் நெறிகள் இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இவர் குறித்து
திருமந்திரத்தில் திருமூலர் நந்தியிடம் பயின்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
நந்தி
அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள்
நால்வர் சிவயோக மாமுனி
மன்று
தொழுத பதஞ்சலி வியாக்கிரன்
என்ற
இவர், என்னுடன் எண்மரும் ஆமே
திருமந்திரம் – 50
இந்த எண்மரையும் கைலாய வர்க்கம் என்று
சித்தர் நூல்கள் குறிப்பிடுகிறது. இதில் சித்தர்கள் வெளியில் உருவ வழிபாடாக உள்ள
கடவுளர்களை மனித உடலில் உள்ள சில உறுப்புகளில் நிலை கொண்டுள்ளதாகவும்
அவுறுப்புகளின் செயல்களைக் கொண்டு உற்பத்தி அழித்தல் காத்தல் கடவுளாகவும்
இவர்களுக்கு மேலான பரம்பொருள் உள்ளது அதனுடன் இணைவதே முத்தி என்று சொல்கின்றனர்.
இவர்கள் மூடநம்பிக்கை சகுன வழிபாடுகளை கண்டித்தாலும் பார்ப்பனிய வேத உபநிடதக்
கருத்துக்களையும் புத்த,சமண மத உயிக்கொல்லமை, போன்ற ஒழுக்க நெறிகளையும் உள்வாங்கிக்கொண்டு
அதே நேரத்தில் கடவுளை வெளியில் தேடவேண்டாம் நம் உள்ளேயே உள்ளார். என்று
கருதினார்கள். இதற்கு அடிப்படையாக இருந்தது எந்த ஒரு பொருள் உண்டாவதற்க்கும், ஒரு
பொருள் இயங்குவதற்கும் ஓர் அடிப்படை இருக்கும் அதற்கு காரணம் என்ன என்ற கேள்வியை
எழுப்பிக்கொண்டார்கள் இதுவே மூலப்பொருள் அதற்கு காரணன் என்றும் பெயரை வைத்துக்
கொண்டார்கள். இந்தக் காரனனுக்கு பலபெயர்கள் அவரவர் மொழி இடம் காலம்
சூழ்நிலைக்கேற்ப பராபரை, பரப்பிரமம், பரம்பொருள், ஆதி, காரணி, பரமான்மா, என்று
வைத்துக்கொண்டு அதன் வழியாக தங்கள் சித்தாந்தத்தை விளக்கினார்கள். பிரபஞ்சத்தில்
நம் கண்ணுக்கும் கண்ணுக புலப்படாத ஆனால் நம்மால் அறிவின் பரிணாமத்தில் உண்டாக்கிக்
கொண்ட கருவிகளான தொலை நோக்கி, நுன்பெருக்கி போன்ற கருவிகளின் வாயிலாக வெளிப்படும்
அனைத்துப் பொருளும் அடங்கியது பிரபஞ்சம், பரவெளி என்று சொல்லப்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
தொல்காப்பியர் புலன் அடிப்படையில் உயிர்களை பாகுபடுத்தி மரபியலில்
விளக்கியுள்ளார். இந்த உயிப்பகுபாடு சமண மதத்துக்கு உரியது.
உடம்பால்
மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள்
உடம்பாலும்
நாவாலும் அறிவன இரு அறிவு உயிர்கள்
உடம்பு,
நாக்கு, மூக்கு மூன்றாலும் அறிவன மூவறிவு உயிர்கள்
உடம்பு,
நா, மூக்கு, கண் நான்காலும் அறிவன நால் அறிவி உயிர்கள்
உடம்பு,
நா, மூக்கு, கண், காது, இவை ஐயறிவு உயிர்கள்
இந்த
ஐந்தோடு மனத்தளுமறிவான ஆறறிவு உயிர்கள்
இந்தக்
கோட்பாடுகள் எவ்வாறு எற்பட்டது அறிவின் வளர்ச்சி மாற்றம் மனிதன் தன் வாழ்வியல்
சூழ்நிலையில் ஐம்புலன்களைக் கொண்டு அறிந்து ஒவ்வொன்றிக்கான காரணங்களையும் ஆய்ந்து
ஏற்படுத்திக் கொண்ட கருத்துக்கள். உடம்பு, நாக்கு, மூக்கு, கண், செவி இந்த
ஐந்தையும் பயன் படுத்தும் ஊர்வன, பறப்பன, நடப்பனவற்றில் மனிதன் சிந்திக்கும்
ஆற்றல் அதிகமும் அதனை வெளிப்படுத்தவு, செயல் படுத்தவும் வல்லவன் இந்நிலை அன்றைய
காலகட்டத்தில் சரியாக இருந்து இருக்கலாம். ஆனால் இன்றைய நவீன கண்டு பிடிப்புகள் பல
மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒரு நாய் தன் மோப்பசக்தியால் ஆயிரக்கணக்கான மணங்களை
வேறுபடுத்தி அறியக்கூடியது. எஜமானின் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைப் புரிந்து
கொண்டு செயல் படுகிறது. அதன் உடல் உறவுக்கு உரிய காலத்தில் தன் இணையை தேடிக்கொள்ள
அறிந்து உள்ளது தான் விரும்பிய இணையுடன் விரும்பி இணைகிறது அந்த நிலையில் தன்
விருப்பத்திற்கு இல்லாத நாயை நெருங்க விடுவது இல்லை. இது போல் பல உயிரினங்கள்
சிந்திக்கும் ஆற்றல் இருப்பதால் தான் இயங்க முடிக்கிறது. தூக்கணாங்குருவி கூடு
கட்டுவதை பார்த்து இருப்பிர்கள் எவ்வளவு திறமையாக அதற்கு உள்ள மூக்கு கால்களைக்
கொண்டு கட்டுகிறது. ஆனால் அவை அவற்றிற்கு பெரிய அளவில் ஆற்றல் இல்லை என்பதே ஆகும்.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே பொருள் முதன்மையானதா? அல்லது அது பற்றிய
கருத்து முதன்மையானதா? எதிலிருந்து எது தோன்றியது? இந்தக் கேள்விகளுக்கு விடை காண
முற்ப்பட்ட போது தத்துவங்கள் தோன்ற ஆரம்பித்தன. பொருள் முதன்மையானது, அதன் பிரதி பலிப்பே
கருத்து என்று சொன்னார்கள். பொருள் முதல்வாதிகள். கருத்துத்தான் முதன்மையானது,
அதன் பிரதிபலிப்பே பொருள் என்று சொன்னவர்கள் கருத்து முதல் வாதிகள். உலோகம் –
என்பது வடமொழிச்சொல் இதற்கு இணையான தமிழ் சொல் பொருள். இதனால் உலோகாயாத வாதிகளை
தமிழில் பொருள் முதல் வாதிகள் என அழைக்கின்றனர். உலோகாயாத வாதிகள் கருத்தியல்
வாதிகளின் தத்துவத்தை நிராகரித்தார்கள். அண்டம் இயற்கையானது. என்றும் உள்ளது.
யாராலும் படைக்கப்படவில்லை. காட்சி ஒன்றே மெய். நிலம், நீர், தீ, வளி(காற்று),
ஆகாயம் என்னும் பூதங்களே மெய்ப்பொருள்கள்.
பூதங்களின் சேர்க்கையால் தோன்றிப் பிரிவால் இறப்பதாகிய உடம்பினிடத்தே அறிவு, கள்
குடித்தவனுக்கு தோன்றும் மயக்கம் போல் வெளிப்பட்டு அழியும். பரலோகம், சொர்க்கம்,
நரகம், மறுமை என்பதெல்லாம் இல்லை. காயம் (உடல்) இது பஞ்ச பூத பொருள்களின்
கூட்டால். இதன் இயக்க சக்தியாகிய இயக்கத் தன்மை உயிர் எனப்படுகிறது. காயத்திற்கு
வேறாக ஆன்மா இல்லை.
வினை இல்லை ( செயல் என்று தனியாக இல்லை
பொருள் சேர்க்கையில் செயல் பிறக்கிறது.) கடவுள் இல்லை. இன்பமும் பொருளுமே உறுதிப்
பொருள்கள் (புருசார்த்தங்கள்) இன்ப துன்பங்களில் இருந்து விடுபடுவது என்பது இல்லை
இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை. இன்பத்தின் அளவைப் பெருக்குவதும்
துன்பத்தின் அளவைக் குறைப்பதுமே வாழ்க்கையின் அனுபவக் குறிக்கோளாகும்.
பிற்காலத்தில் காரல்மார்க்ஸ் கருத்தியல் முதல் வாதத்திற்கு எதிராகப் பொருள் முதல்
வாதத்தை முன்வைத்தார். ஆனால் அவருக்கு முன்பே பொருள் முதல் வாதக் கோட்ப்பாடு
இருந்தது. நான் ஏற்கனவே குறிப்பட்டுள்ளது போல் ஐம்பொறிகள் செயல் பற்றி
சொல்லியுள்ளது படி மரம் ஒரு பொருள் (mater) அதை நம் உடல் முன்
கூறியபடி மூளை என்னும் பொறியில் பதிகிறது இந்த மூளையின் செயலில் ஒன்றுதான் மனம்
எனப்படுகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் மரம் ஒரு பொருளாகவே
இருக்கும். மூளை நுட்பமான ஒரு கருவி சிந்திக்க வல்லது செயல் திறன் கொண்டது
பகுத்தறியும் ஆற்றல் கொண்டது. ஆன்மா என்று தனியாக இருக்குமானால் கோமா நிலையில் ஒரு
உடல் இருக்கும் நிலையிலும் சில காரணங்களால் உடலின் சில பாகங்கள் இயக்க நிலை
பாதிக்கப் பட்ட நிலையில் ஆன்மாவால் இயக்க முடிவது இல்லை இன்றைய விஞ்ஞானம் மூளையின்
செயல் நிற்பே இறப்பாக சொல்கிறது. புற உலோகொடும் உறவு கொள்ளும் அதே சமயம் உடம்பின்
அனைத்து உருப்புகளது செயல்பாடு களையும் அது ஒருங்கிணைக்கிறது. அதனை மனம்
என்கிறோம். இன்றயகால கணணி, ரோபோக்கள் போன்றவையின் அமைப்பையும் செயலையும்
ஒப்பிட்டுப்பார்த்தால் புரியும் நாம் அதன் நினைவுச் சேமகத்தில் கொடுத்ததை பின்
நாம் இடும் கட்டளைக்கு ஏற்ப வெளியிடுகிறது இது போல் நம் மூளையில் நாம் குழந்தையில்
இருந்து உள்ளிடு செய்த விபரங்களில் இருந்து முடிவுகளை எடுக்கிறோம். இதற்குள்
இயங்கும் மனம் என்னும் இயக்கம் சிந்தனையாகும் மாறும் தன்மை உடையது. பொருளில்
இருந்தே அனைத்தும் தோன்றின புல், பூண்டு, புழு, மரம், பறவை, இரும்பு கல் உலோகங்கள்
வாயுக்கள் என்று அனைத்தும் பொருள் மாற்றத்தால் உண்டாகின்றன. ஒவ்வொரு வினாடியும்
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஒரு விதை மரமாக, செடியாக மாறுகிறது.
முதலில் தோன்றிய இலை உதிர்ந்து வேறு இலை உண்டாகிறது. இது நம் கண்ணால் பார்க்கும்
செயல். இது இல்லாமல் இன்று இருக்கும் ஈயம் ஒருகாலத்தில் ரேடியம் உலோகமாக இருந்தது
இன்று வேதியல் மாற்றத்தால் மாறிவிட்டது. இது போல் நம் உடலினுள்ளே உள்ள நாம்
பார்க்கமுடியாத செல்கள் இரத்த அணுக்கள் என்று மாறிக்கொண்டே இருக்கிறது. இவையாரோ
ஒருவரால் வெளியில் இருந்து படைக்கப் பட்டவை அல்ல. அண்டம் என்பது வெளி, காலம்,
பொருள், ஆற்றல் இவற்றால் ஆனது. பொருளுக்கு, காலமும், இடமும் ( Time and spece) உண்டு அவற்றை
ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாது. பொருள் எதிர் மின்மம் (electrons) நொதுமம் (neutneutrons) நேர்மின்மம்
(protrons) பொடிமம் (quarts) போன்ற பல நுண்ணிய துகல்களால் ஆனது. பொருள்
தொடக்கமும் முடிவும் இல்லாதது. பொருளை படைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
பொருளை ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.
பொருளில் இருந்தே கருத்துக்கள்
தோன்றுகின்றன. ஒரு பொருளை நாம் பார்த்து அதன் குணாம்சங்களை அறிந்தபின் அதைப்
பற்றிய முறை படுத்தி அறிந்து கொள்வது மனிதனிடம் காணப்படுவது ஆறாவது அறிவான
பகுத்தறிவின் மூலமே. எனவே பொருள்களில் இருந்தே கருத்துக்கள் தோன்றுகின்றன.
கருத்தில் பொருள்கள் தோன்றுவது இல்லை. இந்த உண்மையைத் தெளிவாக தெரிந்து கொண்டால்
மூடநம்பிக்கைகளில் இருந்து மனம் விடுபடும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்
பின்னாகத்தான் கடவுளைப் படைத்தான். அச்சம் காரணமாக கடவுள் படைக்கப்பட்டார். கடவுள்
என்று ஒரு பொருள் இருந்து இருக்குமாயின் பலவித கடவுளர்பற்றி ஒவ்வொரு மதத்திலும்
பலவாறாக சொலலப்படமாட்டாது. மாணிக்க வாசக சுவாமிகள் ஒரு பாடலில் சொல்கிறார்.
“வானாகி
மண்ணாகி மரமாகி கோனாகி”
வளியாகி ஒளியாகி ஒலியாகி யான்
எனது
என்று அவரவரை கூத்தாட்டுவானாகிய
உன்னை
என் சொல்லி வாழ்த்துதுனே “
இவர் இந்தப்பாடலில் சொல்கிறார். எல்லாப்
பொருளிலும் நீயே இருக்கிறாய் எனவே உன்னை நான் மரம் என்று சொல்வதா வானம் என்று
சொல்வதா உனக்கு என்ன பெயர் சொல்லி நான் வணங்குவேன் என்று சொல்கிறார்.
ஐம்புலன்களுக்கும் அறியப்படாத ஒருபொருளை தன் நம்பிக்கை ஒன்றின் காரணமாகவே அவரை
அவரால் ஒரு உருவகப் படுத்தவோ அல்லது அதற்கு என்ன சொல்லிக் அழைப்பது என்று
வருந்திக் சொல்கிறார். மனிதனுக்கு கடவுள் என்பது கருத்தியல் வாயிலாக அந்த அச்சம்
மனிதனது மனதில் மனதில் பதியப்பட்டது அறிவியலின் முலம் அந்த அச்சத்தை நீக்கினால்
கடவுள் மறைந்து விடுவார். பரமாத்மா, சீவாத்துமா, பதி, பசு, தளை(பாசம்), ஆணவம்,
கன்மம், மாயை, சொர்க்கம், நரகம், எல்லாமே கருத்தியலே அவை மனிதனின் கற்பனையே தவிர
அவற்றை கண்ணால், அல்லது ஐம்புல உணர்வால் உணரமுடியாது. புத்தரும், மகாவீரரும், ஒருவகையில் பொருள் முதல் வாதிகளே. இருவரும்
உலகத தோற்றத்துக்கு ஒரு முதல் காரணன்
இல்லை என்றார்கள். ஆனால் சித்தர்கள் உருவ வழிபாடுகளையும், சடங்குகளை வெறுத்தாலும்,
உலகு இயக்கத்திற்கு ஒரு காரணன் உண்டு என்றும் அதுவே எல்லாமுமாக உள்ளது மேலே
மாணிக்கவாசக சுவாமிகள் சொளியுள்ளது போல் ஆன்மா,பரமான்மா பதி, பாசம் போன்ற
கருத்தியலை கொண்டவர்களே.
சங்க காலத் தமிழர்கள் முற்பகுதியில்
வாழ்ந்தவர்கள் முற்ப்போக்கு சிந்தனையோடு வாழ்ந்தவர்களே. இன்பம், துன்பம், பிறப்பு,
இறப்பு, இதுதான் இயற்கை என சங்கப் புலவர்கள் பாடி இருக்கிறார்கள்
யாதும்
ஊரே யாவரும் கேளிர்
தீதும்
நன்றும் பிறர் தரவாரா
நோதலும்
தணிதலும் அவற்றோரன்ன
சாதல்
புவதன்றே வாழ்தல்
இனிது
என மகிழ்கிந்தன்ரும் இலமே மாட்சியின்
பெரியோரை
வியத்தலும் இலமே
சிறியோரை
இகழ்தல் அதனிலும் இலமே
புறம் – 192,1-6, 11,13
நன்மைக்கும்,
தின்மைக்கும் காரணங்கள் நமது செயல்களே அன்றி பிறர் கொடுத்து வருவது அன்று எனப்
பூங்குன்றனார் என்ற தமிழ் புலவர் பாடியுள்ளார். மற்றும்
இன்பமும்
இடும்பையும் புணர்வும் பிரிவும்
நண்பகல்
அமையமும் இரவும்போல
வேறு
வேறு இயலவாகி மாறு எதிர்த்து
உள
என உணர்ந்தனன ஆயின
புறம் – 327,1-4
தேய்தல்
உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல்
உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும்
அறியக்காட்டி
திங்கள்
புத்தேள் திரிவரும் உலகத்து
புறம் 27, 11-14
இன்பமும்
துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை அதுதான் இயற்கை என்பதை ஏற்றுக்கொண்டு
வாழ்ந்தவர்கள். கோயில் சமயம் மதம் என்ற சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை சங்க
இலக்கியங்களிலும் இல்லை. அவர்கள் மேற்கண்ட செயல்களை இயற்கையாக எடுத்துக்
கொண்டார்களே தவிர நாம் முன் செய்த வினை அதனால் என்று தங்களின் கற்பனை வரையறைக்குள்
சிக்கிக் கொள்ளவில்லை. எதார்த்த வாழ்வியலை மேற்கொண்டவர்கள்.
தாம் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலைக்குரிய தெய்வங்களையே வணங்கினார்கள். போரில் விழுப்புண் பட்டு
இறந்தவர்களுக்கு ஊரின் ஒரு கோடியில் மரத்தின் கீழ் நடுகல் இட்டு அவர்களின் செயலுக்கும்
நன்றிக்கடன் செலுத்துவது மற்றும் நினைவுக் கருத்தியலாக வணங்கினார்களே தவிர இன்ப துன்பக்
காரனாகாரிய வினைக்கு பரிகாரமாக வணங்கவில்லை. மறக்குடிப் பிறந்த முல்லை நில
மக்களுக்கு குரவும் தளவும் குருந்தும் முல்லையும் என்ற நான்கு வித பூக்கள் அல்லாது
வேறு பூக்கள் இல்லை. அவர்க்கு உணவானது வரகு திணை கொள் அவரை என்ற நான்கு அல்லாது
வேறு இல்லை அவரிடையே நிலவும் குடிவகை துடியன்குடி, பானன்குடி, பறையன்குடி கடம்பன்குடி,
என்ற நான்கு அல்லாது வேறு குடிகள் இல்லை. இவ்வாறு
பல வகை பூ அனிதலும் உணவு உண்டலும் குடிவகை கோடலும் இச் சிறுகுடியில் உள்ளோருக்கு
இயல்பாயினும் பல கடவுளை வழிபடுதலே இயல்பாகும். கொம்புகளை உடைய யானைகளைக் கொன்று
தாமும் விழுப்புன்பட்டு இறந்த வீரர்களது நினைவாக அவர்களது பெயரும் பெருமையும்
எழுதி நட்ட கல்லைக் கடவுளாக கருதி நெல்லை சொரிந்து வழிபடுவது அல்லாது நெல்லை
சொரிந்து வழிபடும் கடவுள் வேறில்லை எனசங்கப் புலவர் மாங்குடி கிழார் சொல்கிறார்.
அடலகுந்துப்பின் ------------------
குரவே தளவே குருந்தே
முல்லைஎன்று
இந்நான்கு
அல்லாது பூவும் இல்லை
கருங்கால்
உறகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக்
கொள்ளே பொறிகிளர் அவரை
இந்நான்கு
அல்லது உணவும் இல்லை
துடியின்
பாணர் பறையர் கடம்பென
இந்நான்கு
அல்லது குடியுமில்லை
ஒன்னாத்
தேவர் முன்னின்று விலங்கி
ஒரிறேந்து
மருப்பிற் களிர் எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே
பாரவினல்லது
நெல்லுகுத்துப்
பரவுங் கடவுளும் இலவே
புறம் --- 335
இவ்வாறு சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவோடு இசைந்த தெய்வ
வழிபாட்டைக் கொண்டிருந்தனர். இத்தகைய தமிழர் வாழ்வியலில் ஆரியம் புகுந்தபின்
அவர்களின் மொழி பண்பாடு கலை தத்துவங்கள் புகுந்தது. இது போல் வடக்கில் ஆரியத்தின்
வேதகாலத்திலும் வேதக் கருத்துக்களுக்கும் ஒருவரால் அல்லது கடவுளால் அருளப் பெற்றது
என்றால் கருத்துக்கள் பலவித மாறுபாடுகள் அடையாமல் நிலையாக இருக்க வேண்டும். ஆனால்
வேதங்களிலேயே கருத்து மாறுபாடுகள் உள்ளது. பின் அதனை ஒற்றி எழுந்த உபநிடதங்கள்
வேதக்கருத்துக்களுக்கு சிலவற்றில் மாறுபட்டும் சிலவற்றில் ஒத்தும் அதன்
ஆசிரியர்களால் விளக்கப்பட்டன. அவர்களின் அனுபவங்களில் முழுமையாக கடவுளை உருவமாக
ஏற்றுக்கொள்ள இயலவில்லை கடோபோ உபநிடதத்தில் நிசிகேதன் தன் தந்தையால் எமனுக்கு
தானமாக அளிக்கும் கருத்தியல் வருகிறது அதில் அவனது கேள்விக்கு அவரால் நேரிடையாக
பதில் அளிக்க இயலவில்லை அவரால் பொறுமை காக்க இயலவில்லை தெரிந்த ஒரு பொருளாக
இருப்பின் அதை விளக்கி சொல்லி இருக்க முடியும். இது போல் தான் தைத்திரிய
உபநிடத்திலும் விளக்க முற்படும் போது அண்ணம் ( உணவு) தான் காரணம் கண்டு பிடிப்பதாகவும் பின் காற்று
என்றும் ஒரு முடிவான கருத்தை ஐம்புலனுக்கு உட்பட்டதை சொல்ல இயலவில்லை. அவர்களின்
முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத கருத்தை பின் வந்த ஆரியர்கள் தங்களின் வருவாய்
இழப்பு ஆதிக்கநிலை இழந்து விடும் நிலை இதில் மாறுபட இதிகாச புராணங்களை தங்கள் மனம்
போனபோக்கில் உண்மைக்கு மாறுபட்ட பல செய்திகளை காலப்போக்கிற்கு ஏற்ப புனைந்து எழுதி
உள்ளனர். இக்கதைகளை படிப்பறிவில்லாத மக்கள் மனதிலும் படித்தவர்கள்
சிந்திக்காவண்ணம் புகுத்தினர். படித்தவர்கள் மத்தியில் கதை போக்கிற்கு தத்துவங்களை
இணைத்தும் விளக்கியும் படிக்காதவர்கள் மத்தியில் பக்தியை சரணாகதி என்றும் விதி
என்ற கட்டுக் கோப்பையும் நன்மை தீமைக்கு விதியே காரணம் என்று மனதில் பதிய வைத்தனர்
அதுவே இன்றுவரையில் மக்களின் மனதில் மாறாமல் இருக்கிறது, இராமாயணத்தில் சீதை
மீட்புக்காக அனுமான் என்னும் குரங்கு இராமனிடம் விபீசனனை அழைத்து வந்து ராமணனிடம்
விட்டு சொல்கிறான் இவன் ராவனின் தமையன் இவன் இராவணனின் மீது வெறுப்புற்று உள்ளான்
இவன் இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தி உள்ளன் இவனை நாம்
பயன்படுத்தலாம் என்று சொல்கிறான். இதற்கு கடவுள் அவதாரமாக கருதப்பட்டு இராமன் ஆம்
இவனைப் பயன் படுத்தி இராவணனின் இரகசியங்களை அறிந்து இவன் உதவியால் வெல்வோம். இன்று
சொல்லும் போது அனுமான் இவன் தன் சகோதரனையே காட்டிக் கொடுக்கத் துணிந்தவன் நாளை
நம்மை எதிர்க்க மாட்டானா என்று கேட்க்கும் போது கடவுள் அவதராம் சொல்கிறது நமக்கு
நம் வெற்றிதான் முதலில் முக்கியம் அதன்பின் இவனை நாம் பார்த்துக் கொள்வோம்.
என்றும் வாலி வதையிலும் சம்புகன் கொலையிலும் இன்னும் பலவிதங்களிலும் தன் சுய
நலத்திற்க்காக் எத்த தவறையும் செய்வதையும் அதை நியாப்படுத்துவதையும் காணலாம் இதே
போல்தான் மாக பாரதத்திலும் சம்பவங்கள் புனையப்பட்டு இருக்கிறது. திருஞான சம்பந்தன்
என்ற ஒரு நாயன்மார் இவர் பாடினால் கோயில் கதவு திறக்கிறது இன்னொரு நாயன்மார் பாடினால்
காதவு மூடிக் கொள்கிறதாம். ஆனால் இவர்களின் வலிமை வாய்ந்த பாடல்களால் மாற்று
கருத்து உடையவர்கலான சமணர்களை பாடி தன் வயப்படுத்த இயலவில்லை இவர்கள் மன்னரின்
உதவியோடு கழு வேற்றி கொலை செய்யப்பட்டார்கள் இவர்கள் நாயன்மார்களில் ஒருவராகவும்.
விபீசணன் ஆழ்வார்களில் ஒருவராகவும் சொல்லப் படுகிறது. இவை எல்லாம் கடவுளை நிலை
நிறுத்த ஆரியம் செய்யும் ஆதிக்க நிலையாகும். இவர்களின் செயல் கருத்தியல் மாறு பாடு
கொண்டதாகவும் வன்முறைகள் கொண்டதாகவும் இருப்பதால்தான் இன்றும் மதக்கலவரங்கள்
அதனால் ஏற்ப்படும் கொலை வெறிகளும் மலிந்து கிடக்கின்றன. இதில் இருந்து மாறுப்பட்ட
சித்தர்கள் தங்கள் கொள்கையில் அன்பே சிவம் அன்பு சிவம் இரண்டென்பர் அறிவில்லாதவர்
என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றனர். ஆகவேதான் கடவுளை வெளியில் தேடவேண்டாம் உன்
உள்ளேயே தேடு என்று சொல்லி தங்கள் யோகநெறியில் சொலும் போது உடல் உறுப்புக்களுக்கு
சில கடவுளரின் பெயர்களை சொல்லியும் அவ்விடங்களின் செயல் திறனை அக்கடவுளரின்
செயலோடு இணைத்தும் புதிய வழி கண்டனர். இவர்கள் கடவுள் இல்லை என்று நேரடியாகச் சொல்லாமல்
இறுதியில் பரமாத்துமா, பரம்பொருள் என்று உருவவழிபாட்டில் இருந்து மாறிச்
செல்கின்றனர். சித்தர்கள் இதற்கு அடித்தளமாக கொண்டது யோகமுறையாகும்.
இந்த யோகத்திற்கு அடிப்படையாக இருப்பது
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற
எட்டுவிதமான செயல் நெறிகளாகும். இந்த செயல் நெறிகள் யாவும் மனத்தையும், உடலையும்
பக்குவப்படுத்தவும் செய்யப்படும் பயிற்சியாகும். இதில் முதல் மூன்று பயிற்சியே
இதன் அடித்தளம் இயமம், நியமம், ஆசனம் இது மூன்றும் நிலைப்படாவிடில் சித்தர்களின்
உயரிய நிலையை அடைய முடியாது. நாம் ஒரு தொழிலுக்கு எவ்வாறு பயிற்சி பெறுகிறோமோ
அதுபோல் பயிற்சி பெற வேண்டும். முதலில் மனதை பக்குவப் படுத்தும் பயிற்சி இதை இயமம்
என்று அழைக்கின்றனர். பின் அதை நிலை நிறுத்துதல், பின் நீண்டநேரம் உடலை ஒரே
நிலையில் இருக்கச் செய்யும் அமரும்படி செய்தல். இந்த நிலை குறித்து ஞானவெட்டியான் –
1500 ல் சொல்லியுள்ளதைப் பார்ப்போம்.
அட்டாங்க
யோகம் அதுபலித்திட அருளும் முத்தி
தொட்டங்கு
நின்று துணையாய் இயம நியம ஆசனம்
பட்டாங்கில்
உள்ளபடி யறிந்து பாலிக்காதவர்க்கு
முட்டாகு
முப்பு முடியாது மொழிந்தேனிது சத்தியமே –
என்று
சொல்லி இது உண்மையையே என்று உறுதி படசொல்கிறார். இதில் இருந்து அட்டாங்க யோக
பயிற்சி அவசியம் என்பதுவும் புரியலாம். இந்த கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்களும்
இக்கருத்தை உறுதியாக நிலை கொள்ளாதவர்களும் முத்தி நிலையடைய முடியாது. இனி நியமம்
பற்றிப் பார்ப்போம்.
அஹிம்ஸா
– ஸத்யஸ்தேய ப்ரஹ்மச்சர்யா
பரிக்ரஹா
யமா
பதஞ்சலி சூத்திரம் – 30
கொல்லாமை,
உண்மை பேசுதல், திருடாமை, பெண் உறவுகொள்ளாமை, பிறரிடம் பொருள் வேண்டாமை பிரபொருள்
மீது ஆசை கொள்ளாமை என்று நெறிகளை உறுதி பட செயல் படுத்த வேண்டும். இவை புத்த சமண
மதங்களின் நெறியாகும். திருமூலர் சொல்வதைப் பார்ப்போம்.
கொல்லன்,
பொய்கூறான், களவு இலான், எக்குணத்தும்
நல்லான்,
அடக்கம் உடையான், நடச்செய்ய
வல்லான்,
பகுத்துஉண்பான், மாசுஇலான், கள்காமம்
இல்லான்
இயமத்து –இடையில் நின்றானே
திருமந்திரம் – 547
இவர்
சொல்லும் போது நல்லவன் அது மட்டும் அல்ல வல்லவன் பிற உயிர்க்கும் ஈந்து பகுத்து
உண்பான், அடக்கம் உடையான் என்னும் இத்தகைய குணங்களுடன் கூடியவன் என்றும். இது இயம
நெறியாக சொல்கிறார்.
நியமம்
:-
செளச
சந்தோஷ, தப, ஸ்வாத்யா
யேஸ்வர
ப்ரணி தானானி நியமா:
பதஞ்சலி சூத்திரம் – 32
விதர்க்க
பாதனே பிரதி பசஷ்பாவனம்.
ப சூத்திரம் – 33
விதர்க்கா
ஹிம்சாதய: கிருதகாரிதானா
மோதிதா
லோப, க்ரோத, மோஹபூர்வகா
ம்ருது
மத்யாதி மாத்ரா: துக்கா ஞானானந்த
பலா
இதிப்ரதிபட்ச பாவனம்.
ப சூத்திரம் – 34
தூய்மை,
மகிழ்ச்சி, தவம், நூல்கள்படித்தல் இறை நினைவு என்ற ஐந்தும் நியமங்கள் ஆகும்.
விரோதமான எண்ணங்களை அழிக்க அதற்கு நேர்மாறான எண்ணங்களை மனதில் கருதிக்கொள்ள
வேண்டும்.நேரிடையாகவும் மறைமுகமாகவும் குற்றம் நடக்கக் காரணமாக இருக்கக் கூடாது. பிறர்
தவறை ஏற்றுக் கொள்ளுதலும் கூடாது. மோகத்தாலோ கருமித்தனத்தாலோ சாதாரணமாகவோ
நடுநிலையானதாகவோ கூடுதலாகவோ நிகழ்ந்தால் அது துக்கத்தையும் அறியாமையும் பயம்
பொய்யான வாழ்க்கையை உண்டாக்கிவிடும். இதற்கு முன்சொல்லிய இயமம் சரியாக எல்லா நிலையிலும்
மனம் வழுவாது கடைப் பிடிப்பதே நியமாமாகும். இது
பற்றி திருமூலரின் கருத்து.
ஆதியை
வேதத்தின் அப்பொருளாளனை
சோதியை,
அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள்
மன்னு பராசக்தியோடு உடன்
நீதி
யுணர்ந்து நியமத்தனாமே
திருமந்திரம் – 548
முதல்
பொருளும் அனாதி பொருளுமானவனும் வேதமும்சொல்லும் பொருளாய் உள்ளவனும் சோதி உருவமாய்
உள்ளவனும் ஆகிய சிவனுடன் நம் மூலக்கனல் என்னும் தீ சக்த்தியை தலை உச்சியில் உள்ள
ஆயிரம் இதழ் தாமாரையாகிய சஹாஸ்ராரத் தலத்தில் இணைப்பதற்கு நடுநிலை தவறாது
உண்மையோடு செயலிப்பதே நியமாம். (இது மட்டும் அல்லாது இறைவன் என்பது சோதி உருவம்
கொண்டவனாகவும் சொல்கிறார். இதுவே ஆற்றலாகிய சக்தியை பொருளாகிய நெருப்பு என்னும்
சிவத்துடன் இணைத்தல் ஆகும்.) இனி நந்தி என்ற சித்தரின் கருக்கிடை 300 என்னும்
நூலின் சில பாடல்களைப் பார்ப்போம்.
தெரிவல்லோபிரபஞ்ச
மாயை தள்ளித்
தேரஎன்றால்
வெகுநாள்தான் செல்லுமோ சொல்
முறிவல்லோ
பெண்டுபில்லை மனை எல்லாம்
முன்தேடியபொருள்களிட
ஆசைதள்ளி
நெறியல்லோ
புருவமையத் தொளியில்நின்று
நேசம்
வைத்து மதி வாங்கி ரவியில் சேரே
ந – கருக்கிடை- 17
சேர்ந்திட
வேண்டாம் திருட வஞ்சகரைப்
பார்த்திட
வேண்டாம் பரமலோபியரை
ஏற்றிக்
கழித்திடும் இடும்பர் கசடரை
சாற்றிப்
பழிப்பவர் தம்மைத் தள்ளி நில்லே
பேசினதால்
வருவதென்ன பொருளை எல்லாம்
பிதற்றினதால்
பலித்திடுமோ பேயே சொல்லு
மாசிமறு
இல்லாத நிலைமை உள்ள
மனத்தை
நெடுநாள் பழக்கத் தாலேகண்டு
தேசி
என்ற குதிரை வழி நடத்தும் மார்க்கம்
செப்புவாய்
ஞானம் என்ற போதம் தன்னை
வீசி
விளையாடுகின்ற காலம் பார்த்து
ஞானநெறி
:-
தானான
ஞானத்தின் வழியைச் சொல்வேன்
தன்மையுடன்
பெருமை தனைத் தள்ள வேண்டும்
தேனான
எவ்வுயிர்க்கும் இரங்கவேண்டும்
தீவினைகள்
வஞ்சகங்கள் செய்யக் கூடாது
ந – கருக்கிடை – 34
நிற்பது
நிற்க நிலை தவறாமல்
சொற்பவாழ்வு
துவண்டலையாதே
அற்புதம்
ஆன ஆனந்த போதம்
கற்பனை
ஆக கண்டு கொள்வாயே
ந – கருக்கிடை – 54
சேர்த்துப்
பார் வயித்தியத்தில் உன்னைமிஞ்சி
ஜெகத்திலே
வேறு ஒரு மனிதர் உண்டோ
பார்த்துப்பார்
ஆண்மை மிஞ்சிப் பேச வேண்டாம்
பரதேசி
எளியவன் போல் உலகத்துள்ளே
கார்த்துப்பார்
எவர்மிஞ்சிப் பேசினாலும்
கருதாதே
மனம் அடங்கிக் கணிந்துபேசு
கூற்றுப்பார்
பிரபஞ்ச மாயை எல்லாம்
கூடிவரப்
போறதில்லை ஞானநிலை பெரிதே
ந – கருக்கிடை – 185
ஞானம்
என்ற அறிவல்லோ விவேகம் புத்தி
நல்மனதாம்
அறிவுடனே தன்மை வேண்டும்
ஈனம்
இன்றி ஈவதுவும் இறக்கம் வேண்டும்
எவ்வுயுரும்
தன் உயிர் என்றெண்ணவேண்டும்
மானம்
இன்றிப் பாசம் அதை அகற்றவேண்டும்
ந –கருக்கிடை – 186
இவ்வாறு
சித்தர் நூல்களில் ஆங்காங்கே இயம நியமா நெறிகள் மீண்டும் மீண்டும்
சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆதார நெறிகளை முறையாக கடைப்பிடித்து நடக்காவிடில்
உன்னதமான நிலையை அடைய முடியாது. எனவேதான் இதை வலியுறுத்துகின்றனர். இந்த யோக
நிலையிலும் மூன்று இடங்கள் மனத்தை செலுத்த நல்ல இடங்களாகும். பிரமனது வீட்டிலும்,
விஷ்ணுவின் வீட்டிலும் மனத்தை செலுத்துவது மேற்கண்ட ஒழுக்க நெறியினை சரியாக
கடைப்பிடிக்கதவர்களை பெண்ணாசையிலும் உலக ஆசைகளிலும் செலுத்தி யோக பங்கம் ஏற்பட
செய்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இனி
அடுத்த ஆசனம் பற்றிப் பார்ப்போம்.
“ஸ்திர
(ம்) ஸுகமாசனம்”
ப சூத்திரம் – 46
உறுதியாகவும்
சுகமாகவும் இருப்பது ஆசனம். நாம் முன் பார்த்தது மனத்திர்க்கான நெறி முறையாகும்.
இது உடலுக்கான நெறி முறையாகும். உடல் நீண்டகாலத்திற்கு அசைவற்று சோர்வில்லாமல்
மாறுபாடுகள் இல்லாமல் அமைதியாக உட்க்கார்ந்து இருத்தல். ஆசனங்கள் பல உண்டு சில
உடலை வருத்தி செய்வது சில ஆசனங்கள் அதிக வருத்தமில்லாதது. அவரவர் உடல் நிலைக்கு
ஏற்ப நீண்ட நேரம் உட்க்கார பழகிக் கொள்ள வேண்டும். முதுகு எலும்பு வளையாது
நிமிர்ந்து இருப்பது அவசியம். இனி அடுத்த நிலைகள் யாவும் நம் முதுகு தண்டு வழியாக
நடை பெறக்கூடிய பயிற்சியாகும்.
ப்ரயத்ன
சைதில் யானந்த
ஸமாபத்திப்
யாம்:
ப சூத்திரம் – 47
ஆசனத்தில்
அமைதியாகவும் மனத்தை ஆனந்தமாகவும் செலுத்துதல் வேண்டும். இவாசனங்கள் குறித்து மற்ற
திருமூலர் போன்ற சித்தர்களின் கருத்தைப் பார்ப்போம்.
ஆதனம்
:-
பங்கயம்
ஆதிபரந்த பல ஆதனம்
இங்குளவாறு
ஒரு நாலும் அற்றினுள்
சொங்கு
இலை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க
இருப்பத் தலைவனும் ஆமே
இருக்கைகள்
பல அதில் நாலு சிறந்தது. அது சொங்கு (சுவத்திகம்),இலை (பத்திரம்), மயில் (மயூரம்), சிங்கம்
என்பவையாகும்
இந்த
இயம நியம ஆசனம் என்ற மூன்றுமே யோகநிலைக்கும் அதனால் பெறவேண்டிய பேரின்ப நிலைக்கும்
அவசியம் ஆகும் இதில் நிலைப்பாடு இல்லாதவர்கள் அஸ்திவாரம் இல்லா கட்டிடம் போலாவார்.
அவர் சரிவு உறுதியாகும். எனவே இம்மூன்று நெறிகளையும் கடைபிடிக்க வேண்டும் இனி
பிரணாயாமம் பற்றிப் பார்ப்போம் ( பொதுவாக இந்த யோக நெறிகளை கேரளா பகுதியினர் மறிக்கும்
வித்தை என்பர். அதாவது இறப்பதற்கு பயம் இல்லாமல் இருப்பதற்கான வழியாகும்.)
பிரணாயாமம்
:-
தஸ்மின்
ஸதி ச்வாஸப்ரச் வாசஸ்யோ
கதிவிச்சேத:
ப்ராணயாம:
ப சூத்திரம் – 49
பாஹ்யாப்
யந்திர ஸ்தம்பவிருத்திர்
தேச,
கால, ஸங்க்யாபி பரித்ருஷ்டோ
தீர்க
சூக்ஷ்ம:
ப சூத்திரம் – 50
பிரணாயாமம்
பற்றி திருமூலர் பாடலைப் பார்ப்போம் :-
ஐவர்க்கு
நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்
கொண்டு வரும்புரவி மற்றுஒன்றுண்டு
மெய்யர்க்குப்
பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத்
துள்ளிவிழுந்திடும் தானே
ஐம்பொறிகளுக்கு
தலைவன் நம் உடலை இயக்கிக்கொண்டிருப்பதான உயிர் அந்த உயிர் மூச்சாகிய குதிரையைக்
கொண்டுள்ளது. அது உண்மையானவரை ஏற்றிக்கொள்ளும் பொய்யானவரை தள்ளிவிடும். என்கிறார்
பெரும்பாலும் சித்தர்நூல்களில் சுவாசத்தைக் குறிக்க புரவி, வாசி, சாரை என்று பல
குறியீட்டு பெயர்களால் சுட்டுகிறார்கள்.
மேல்கீழ்
நடுப்பக்கம் மிக்கு உறப்பூரித்து
பாலாம்
இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகிஉந்தியுள்
கும்பித்து வாங்கவே
ஆலாலம்
உண்டான் அருள் பெறலாமே
:-- திருமந்திரம் – 565
மூச்சை
இழுக்கும் பொழுது தொண்டை நுரையீரல் வயிறு இவை பருக்கு மாறு இழுத்து தங்க வைக்கவேண்டும்
இவ்வாறு செய்தால் சிவனருள் பெறலாம்.
வெளிவிடும்
உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்படுத்தல். வெளியிலேயோ,
உள்ளேயோ இயக்க உள்ளதாக அல்லது அசைவற்றதாக, இடம், காலம், அளவு, மூலமாக அளக்கப்பட்டு
நீளமாகவோ மிகக்குறைந்த தாகவோ காணப்படுகிறது. நம் உடலின் இயக்கத்திற்கு காற்று மிக
அவசியம். இக் காற்றில் பல வாயுக்கள் கலந்து உள்ளன. அவற்றை சித்த மருத்துவம்
தசவாயுக்கள் என்று குறிப்பிடுகிறது. அவை பிராணன், அபானன், வியானன், நாகன்,
கூர்மன், சமானன், கிருகிரன், தேவதத்தன், தனஞ்சயன் என்று அழைக்கப்படுகிறது. இவை
ஒவ்வொன்றும் நம் உடல் இயக்கத்திற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ் வாயுக்கள்
நம் உடலின் செயலின் போது இயக்கத்திற்கு காரணமாகவும், வெளியேறியும் உள்ளியிங்கியும்
செயல் படுகின்றன். இவை பற்றி மருத்துவப் பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.
இவ்விடத்தில் பிராணன் என்று அழைக்கப்படும் ஆக்சிசன் செயலே மிக முக்கியமாகும். நாம்
சுவாசிக்கும் காற்றில் ஆக்சிசன், ஹைடிரஜன், கார்பண்டை ஆக்சைட், நைட்ரஜன் போன்ற பலவித
வாயுக்களின் கலவையே காற்றாகும். எனவேதான் அனைத்து வாயுக்களும் அடங்கிய காற்றை
ஐம்புதங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இது பிரபஞ்சத்தில் விண்வெளியில் உள்ள வாயு
மண்டலம் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியைச் சுற்றி நிலையுள்ளதாகி
விட்டது. ஒளிச் சேர்க்கையில் பச்சைத் தாவரங்கள் காற்றில் இருந்து கார்பன் டை
ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிசனை வெளியிடுகின்றன. மனிதனும் மிருகங்கள் போன்றவை
ஆக்சிசனை எடுத்துக்கொண்டு கார்பண்டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இது போல் பலவித
இரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தக் காற்றில் உள்ள
பிராண வாய்வானது நம் உடலில் நாம் உண்ணும் உணவில் உள்ள கிளைக்கொஜன் என்னும்
சர்க்கரைப் பொருளுடன் வினை புரிந்து கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிசனை
எடுத்துக் கொண்டு செல்களின் இயக்கத்திகும் முக்கிய ஆதாரமாக பயன்படுகிறது. இவ்
இரசாயன் மாற்றத்தின் போது உஷ்ணம் உண்டாகிறது. நாம் இவ் அப்பியாசத்தின் போது
ஆழ்ந்து மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தும் நிறுத்தியும் வெளிவிடுவதுமான செயலை
செய்யும் போது பிராணவாயு நன்றாகவும் அதிகப் படியாகவும் உடலுக்கு பயன்படுகிறது.
இந்த (பிரானாயாமத்தில்) சுவாசப்பயிற்ச்சியில் பூரகம் என்பது காற்றை உள்ளே
இழுக்கும் செயலாகும் இவ்வாறு உள்ளே இழுக்கப்படும் காற்றானது நம் உடலின் நுரையீரல்
இரைப்பையிலும் நிறைகிறது. நுரையீரலில் அதிகப்படியாகவும் இரைப்பையில் கொஞ்சமாகவும்
நுழையும். இந்த நுரையிரலை பிராணமய கோசம் என்று அழைக்கப்படுகிறது. இது நம் உடலுக்கு
தேவையான பிராண வாய்வை காற்றில் இருந்து பிரித்து இரத்தத்தில் உள்ள சிவப்பு நிற
அணுக்களுக்கு உதவி இணையும் வேலையும் அதே நேரத்தில் உஷ்ணத்திர்கும் ( தீ –
பூதத்திர்க்கும் ) காரணமாகிறது. இது போல் நம் உடலின் இன்னொரு பாகத்தை அன்னமய கோசம்
என்று அழைக்கப்படுகிறது. அன்னம் என்னும் உணவானது நம் உடலுக்கு தேவையான இயக்க
சக்தியை உண்டாக்க உணவில் இருந்து தேவையான சர்க்கரைப் பொருளையும் மற்றும் சில
தாதுப் பொருள்கள் வைட்டமின்கள் எனப்படும் சத்துப்பொருள் களையும் பிரித்து
எடுத்துக் கொள்கிறது. இதனாலேயே அன்னம் என்ற பறவையாக உருவகப்படுத்தி அது பாலில்
இருந்து நீரையும் பாலையும் பிரிப்பதாக சொல்கிறார்கள் ஆகவே இந்த அன்னமய கோசம்
அவசியமானது. அடுத்து மனோமய கோசம் என்று அழைக்கப் படுகிறது (ஆனால் அன்றைய நாளில்
மனம் என்று ஒரு பகுதி தனியாக இருப்பதாக எண்ணினார்கள் அந்த இடமாகக் இருதயத்தை
குறிப்பிட்டார்கள். அதையே மனம் இருப்பதற்கான காராணன் உள்ள இடமாகவும்
குறிப்பிடுகிறார்கள். இது பற்றி தைத்திரீய உபநிஷத்தில் பிரம வழிபாடு குறித்தும்
அதன் பலன் பற்றியும் சொல்லப்படுவதாவது.
“
இதயத்துக்குள் அந்த வானம் இருக்கிறது. அதற்குள் இந்த மனோமயமான, அமுதமயமான,
பொன்மயமான புருஷன் இருக்கிறான். அடித் தொண்டையில் உள்நோக்கிச் சிறுமணியைப் போன்றது
தொங்கிக் கொண்டு இருக்கிறது.( நாம் இதை உள்நாக்கு என்று சொல்கிறோம்.) அது
ஆன்மாவின் அடிப்படைத் தளமாகும். பிரமத்தை இப்படித் தொழுகிறவன் சொந்த ஆட்சியைப்
பெறுகிறான். மன அரசனை அடைகிறான். இதனால் அவன் மொழிக்கும், பார்வைக்கும்,
கேள்விக்கும், அறிவுக்கும் அதிபதியாகிறான்.பிரமன் வான உடல் உடையவன்”
இவ்வாறு இதயத்தை மனத்திற்கான இடமாகக்
கருதினார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் நம் மூளையின் ஒரு பகுதியில் நடைபெறும்
இரசாயன மாற்ற பதிவுகளே மனமாக செயல்படுகிறது. என்று சொல்கிறது. இதுபோல் ஆனந்த மய கோசம்
மற்றும் விஞ்ஞான மயகோசம் என்று ஐந்து பிரிவுகள் இருப்பதாக சித்தர்கள்
தெரிவிக்கிறார்கள். இது பற்றி பின்பு பார்ப்போம்.
உள்ளே இழுக்கப்பட்ட காற்றை நுரையீரலில்
சிறிது நேரம் நிறுத்தி வைப்பதற்கு கும்பகம் என்றுபெயர். பின் நிறுத்திய காற்றை
வெளியிடுவதற்கு ரேசகம் என்று பெயர். இந்த நிகழ்வுகளுக்கு சித்தர்கள் இடது பக்க
மூக்கில் இருந்து வரும் சுவாசத்திற்கு இடகலை என்றும் சந்திரகலை என்றும் பல
பெயர்களில் குறிப்பிட்டு உள்ளார்கள். வலது மூக்கில் வரும் சுவாசத்திற்கு.பிங்கலை,
சூரியகலை, என்றும் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். நம் உடலில் சுவாசமானது
எப்போதும் ஒரே மூக்கில் வருவது இல்லை காலை ஆறு மணியில் இருந்து இரண்டு மணி நேரம்
ஒரு மூக்கிலும் அடுத்து இரண்டு மணி நேரம் அடுத்த மூக்கிலுமாக மாறி மாறி வருவதுவும்
போவதுமாக இருக்கும். இதில் மாறும்போது மிக குறைந்த நேரம் இரண்டு மூக்கிலும்
சுவாசிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது அக்கினிகலை என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு மூக்கில் காற்றை இழுத்து குறிப்பிட்ட கால அவகாசம் உள் நிறுத்தி
வெளிவிடுவதை பிரணாயாமம் என்றும் பிராணனை (காற்றை) ஒழுங்குற மேற்கண்ட வாறு
செய்வதற்கு நியமனம் செய்தல் என்பதாகும். இந்த சுவாசமானது ஒருநாளைக்கு 21,600
சுவாசங்கள் நம் உடல் செயல் படுத்துகிறது என்று சித்தர்கள், ரிஷிகள் குறிப்பிட்டு
உள்ளார்கள். இந்த சுவாசத்தை இயம நியம ஆசனப் பயிற்சியில் தேறியவர்கள் இவ் சுவாச
நிலை நிறுத்தல் பயிற்சசியில் இறங்க வேண்டும். அதற்கும் ஒரு கணக்கீடு செய்து
உள்ளார்கள். உள்ளே இழுக்கும் சுவாசத்தை ஒன்று இரண்டு என்னிக்கொண்டோ அல்லது
எழுத்துக்களை சொல்லிக்கொண்டோ இழுக்கவேண்டும் இந்த எண்ணிக்கைக்கு மாத்திரைகள் என்று
சொல்லப் படுகிறது. நான்கு மாத்திரை உளிளுத்து பதினாறு மாத்திரை உள்நிறுத்தி எட்டு
மாத்திரை வெளிவிடுதல் வேண்டும். இதற்கு நாம் மனத்தை எண்ணிக்கையில் கவனம் செலுத்தி
செயல் படும்போது மனமானது வெளி உலக விவகாரங்களில் கருத்தை செலுத்தாமல் ஒரு
நிலைப்படுத்த பயிற்ச்சியாகிறது. இவ்வாறு செய்து வருவதை சிறிது சிறிதாக உள் நிறுத்தும்
நேரத்தை அதிகப்படுத்தி வரவேண்டும் இதனால் சுவாசம் உள்ளுக்குள்ளேயே தங்கும். அந்த
நேரத்தில் சுவாசமானது பயிற்ச்சியின் விளைவாக நாசி வரை வருவதும் பின் நம்
வெளிவிடாமல் தடுக்கும் தடையின் காரணமாக வாய், அபான வழியாகவும் வெளிச் செல்ல
முயற்சிக்கும் இந்த வழிகளையும் தடை செய்யும் போது வேறு வழிதேடும். பொதுவாக இந்த
பயிற்சியில் அதிக நேரம் நிறுத்த பழகியபின் சுவாசமனது சுவாசத்தை வெளிவிட்டபின்
சிறிது நேரம் சுவாசம் மூக்கிற்கு வந்து பின் மீண்டும் உள்சென்றும் வருவதுமாக
இருக்கும் இந்த நிலைக்கு கேவல கும்பகம் அல்லது உசுவாச நிசுவாசம் என்று
சொல்லப்படும்.
தத:
க்ஷிய தேப்ரகாசாவரணம்:
ப சூத்திரம் – 52
தாரணா
யோக்யதா மனஸ:
ப சூத்திரம் – 53
இவிதம் பிரணாம பயிற்சியால் நம் மனதில்
ஏற்பட்டு உள்ள குழப்பங்கள் நீங்கி திடச்சித்தம் உண்டாகி மன ஒருமை உண்டாகிறது.
அடுத்து பிரத்தியாகாரம் என்னும் பயிற்சியாகும்.
பிரத்தியாஹரம்
:-
ஸர்வ
விஷயா ஸம்ப்ரயோகே சித்தஸ்வரூபானுகார
இவேந்திரியானாம்
ப்ரத்யாஹார:
ப சூத்திரம் – 54
இந்திரியங்கள்
தத்தம் குணத்தை விட்டு விலகி சித்தத்தில் நிலையாக இருக்கும் போது பிரத்தியாகாரம்
ஆகிறது. மனம் என்னும் செயலுக்கு ஐந்து இந்திரியங்கள் எனப்படும் கண், காது, மூக்கு,
வாய், உடல் ( தோல்) என்ற உறுப்புகளே காரணம். இது பற்றி முன் விரிவாக சொல்லப்பட்டு
உள்ளது. இந்த உறுப்புகளின் வழியாக செயல் படும் போது அந்தந்த உறுப்புகளின் வழியாக
கிடைக்கும் செய்திகள் நம் மூளையில் பதியப்படுகிறது. இப் பதிந்த விபரங்களை
செயலுக்கு கொண்டு வருவதே மனம், சித்தம் என்று அழைக்கப்படுகிறது. நாம் விழிப்பு
நிலையில் இருக்கும் போதுதான் நம் மூளையில் விசயங்கள் பதியப்படுகிறது தூக்கத்தில்
இன் நிகழ்வு நடை பெறுவது இல்லை. இவ்வாறு பதிந்த
விசயங்களை மறக்கச் செய்து தேவையான விசயங்களை மட்டும் சிந்திக்க
கற்றுக்கொள்வது வேண்டும்.
தத:
பரமா வஸ்யதேந்திரியாணாம்:
இதனால்
ஐந்து இந்திரிய உறுப்புகளின் செயலைக் கட்டுப்படுத்தி நம் தேவைக்கு ஏற்ப
செயலாக்கும் திறமை உண்டாகிறது. இந்த புலன் உறுப்புக்கள் மனதின் ஆட்சிக்கு கட்டுப்
படுகிறது. நம் மனதில் ஒரே நேரத்தில் இரண்டு வித ஆசைகள் உண்டாகிறது. ஒரு சிலேபியை
நம் கண் என்னும் புலன் உறுப்பு பார்க்கிறது உடன் நாக்கில் அதன் சுவை உணர்வு
தெரிகிறது. இதுவும் நம் முளையில் கண்ணாலும் நாக்காலும் சேகரிக்கப்பட்ட விசயம்தான்.
இது போல் சிலேபியில் கலந்து உள்ள சக்கரைப் பொருள் சக்கரை நோயாளிக்கு ஆகாது
என்பதுவும் ஏற்கனவே பதியப் பட்டது தான் இப் போது ஒரு எண்ணம தோன்றுகிறது உனக்கு
சக்கரை நோய் உள்ளது அதனால் சிலேபி வேண்டாம் என்று சொல்கிறது. இந்த விசயமும் நம்
மூளையில் ஏற்கனவே பதியப்பட்டது தான். இரண்டையும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட
வேண்டும். இதற்கு இன்னும் சில விசயங்கள் நினைவுக்கு வருகிறது. இது போல் நமக்கு
தெரிந்த சக்கரை நோயாளியின் அதிகப்படியான சக்கரை உடலில் ஏற்பட்டு அதனால் அவருக்கு
ஏற்பட்ட உடல் உபாதைகள் இது மருத்துவரின் ஆலோசனைகள் என்று பல விசயங்கள் நினைவுக்கு
வந்து ஒரு முடிவு செய்கிறோம். இவையாவும் மூளையின் வேலைதான் இதில் ஒரு நினைவான
எச்சரிக்கையை புத்தி என்றும் சிலேபியை பார்த்தவுடன் தோன்றும் எண்ணம் மனதின்
ஆசையாகவும் நாம் எச்சரிக்கையை மீறிச் சாப்பிடும் செயலை அகங்காராம் என்றும்
சொல்லப்படுகிறது. ஏதோவொரு முடிவை எடுத்தபின் நடக்கும் செயலை சித்தம் என்று நான்கு
வகையாக ஒரு செயலுக்கு பிரிவுகள் சொல்லப்படுகிறது. இதை அந்தக்கரணம் என்று
அழைக்கப்படுகிறது. இவையாவும் ஐம்புலன்களின் அனுபவத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட
விசயங்கள் தான் முடிவுகள் ஆலோசிக்கப்படும் போது எந்த எண்ணப்பதிவுகள் மேலோங்கி
நிற்கிறதோ அது செயல் படுத்தப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் உலகியல் வாழ்வில் நாம்
காணும் அனைத்து விபரங்களையும் பார்த்தாலும் முடிவுகள் எடுக்கும் போது ஒவ்வொருவரும்
ஒரு முடிவு எடுக்கின்றனர். இவையாவும் சூழ்நிலையையும், நம் மனதில் பதியப்பட்ட
விசயங்களில் இருந்து தோன்றுவது தான். ஆகவே யோகம் என்ன சொல்கிறது என்றால் (புற)
வெளிவிசயங்களில் இருந்து மனத்தை உள்நோக்கி திருப்ப சொல்கிறது. இதற்கான பயிற்சிகளே
நாம் முன் பார்த்தது யாவும். திரும்பத்திரும்ப ஒரு செயலை சிந்திக்கும் போதும்
பயிற்சியில் ஈடுபடும் போதும் அந்த எண்ணம்
வலுப்படும். நம் செயலை பயிற்சி கட்டுப் படுத்த உதவுகிறது. அந்நிலையில் காலம்,
சூழ்நிலை யாவும் பின்தள்ளப்படுகிறது. ( இவையாவும் ஐம்புலங்களின் செயல்களின் பிரதி
பலிப்பே நெருப்பு சுடும் என்பது தெரிந்து இருந்தாலும் அந்த நெருப்பை எவ்விதம்
பயன்படுத்துவது என்பது சிந்தனையில் தோன்றிய விசயங்களே ) ஆகவே இந்த சிந்தனைகள்
இறப்பு, பிரிவு என்னும் அடிப்படை அனுபாவங்களில் இருந்து தோன்றிய தேடலே இதற்காகவே
முப்பு என்றும், கற்பம் என்றும் பலவித எண்ணங்கள் செயல்கள் உண்டாயின. இதற்கு முன்
நாம் இறந்து அதனால் ஏற்பட்ட பலன்கள் இதுவரை யாருக்கும் தெரியாது அடுத்து மீண்டும்
பிறப்போம் என்பதுவும் தெரியாது. ஆனால் ஒருவரின் நன்மை தீமைகளுக்கு அறிவியலும்
சிந்தித்து காரணங்களை ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவுகளே மறுபிறவி விதி என்ற
எண்ணங்கள் தொடர்ந்து நம் சிந்தனையில் பதியப் பட்டத்தின் விளைவேயாகும். நாம் கவனக்குறைவால்
கல் தடுக்கி விழுகிறோம், அல்லது 20 மைல்கள் வேகத்தில் செல்லவேண்டும் என்ற இடத்தின்
கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் விபத்துகள் நடக்கிறது. இதை நம் குற்றத்தை நாம்
எப்போது ஒத்துக்கொள்வது இல்லை கல்லின்மீது அதனை திணிக்கிறோம் கல் தடிகிடுச்சு
என்று சொல்கிறோம். இது போல் நாம் செயலில் காரணங்களை சொல்ல இயலாதநிலையில்
விதியையும் மறுபிறப்பையும் பயன் படுத்துகிறோம். இனி தாரணை பற்றி பார்ப்போம்.
தாரணை
:-
தேசபந்த:
சித்தஸ்யதாரண:
ப சூத்திரம் விபூதிபாதம் – 1
குறிப்பிட்ட ஏதாவதொரு பொருளின் மீது மனம்
வேறு சிந்தனை இல்லாமல் நிலைத்து நிற்பது தாரணை என்பதாகும். புலன்கள் எப்போதும்
வெளி உலக விசயங்களிலேயே உலாவித்திரிந்து கொண்டு இருப்பது இயல்பு நாம் பிறந்த
நாளில் இருந்து கண்ணுக்கும், காதுக்கும் என்று ஒவ்வொரு புலன் உறுப்புகளின் வழியான
புலன் இன்பங்களை அனுபவித்து பழக்கப் பட்டதாகும். இதை மாற்றி மனத்தை எவ்வித
சிந்தனையும் இல்லாது இருக்கச்செய்ய வேண்டும். இது இலகுவில் முடியக்கூடிய செயலல்ல
நம் மூளையில் உள்ள சிந்தனா பகுதியில் இருந்து ஏதாவது ஒரு சிந்தனை தோன்றிக் கொண்டே
இருக்கும் இதை இல்லாமல் செய்வது எப்படி. அதற்கு ஒருவழி சொன்னார்கள். முதலில்
உங்கள் மனத்தை சில நாட்கள் நம் சுவாசத்தின் மீது கவனத்தை செலுத்துங்கள் சுவாசம்
உள் இழுக்கும் போதும் வெளிவிடும் போதும் அதன் மீதே இருக்கும் போதும் காற்றின்
செயலிலேயே இருந்து பிற எண்ணங்களில் இருந்து விடு படும் அல்லது அந்த சுவாசத்தை உள்
இழுக்கும் போது எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிலோ அல்லது ஏதாவது எழுத்துக்கள் அம்
,உம் அல்லது ந, ம என்ற வார்த்தை மனதில்
சொல்லிக்கொண்டே எண்ணிக்கை அளவிலும் சரியாக இருக்கும்( இந்தக் கால அளவை மாத்திரைகள்
என்று குறிப்பிடுவர் ) போது மனம் வேறு சிந்தனையில் இருந்து விடுபட்டு நிலைப்பட பழகிக்கொள்ளும்
மற்றபடி தனியாக மந்திரம் என்பது சக்தி வாந்தவையோ அல்ல இந்த பயிற்சிக்குப்பின்
தியானம் என்னும் பயிற்சியாகும்.அது பற்றிப் பார்ப்போம்.
தியானம்
:-
தத்ர
ப்ரத்யயை கதானதா த்யானம்:
முன் நாம் செய்த பயிற்சியில் மனத்தை வேறு
விசயங்களில் செல்லாமல் ஒரே விசயத்தை பற்றி எண்ணிக் கொண்டு இருக்க பழகினோம். இது
நம் வாழ்வில் அன்றாட நிகழ்வில் ஒன்றுதான் நம் ஒரு புத்தகத்தை படிக்கிறோம் அப்போது
நம் கவனம் அதிலேயே இருக்கும். அவ்வாறு கவனம் அந்த புத்தக செய்தியில் ஆழ்ந்து
படிப்பது மட்டுமே நம் மூளையில் பதியும் கவனச் சிதறலின் போது நாம் படித்தது
நினைவில் தங்காது. எனவேதான் நாம் மனப்பாடம் செய்யும் போது மீண்டும் மீண்டும்
படித்து நினைவில் கொண்டு வருகிறோம் படித்ததை எழுதிப் பார்க்கும் போது நினைவில்
பதியாத பகுதிகள் வரும்போது அந்த இடத்தில் நின்று விடும் பின் மீண்டும் படித்து அதை
நினைவிற்கு கொண்டு வந்து அந்த நினைவை நிலைப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறு ஒரே
விசயத்தையே மனம் அதிக நேரம் சிந்திக்கப் செய்வது தியானமாகும். சுமார் 12 வினாடிகள்
மனம் வேறு சிந்தனை இல்லாமல் ஒரு பொருளின் நிலைப்பாட்டால் அது ஒரு தாரனையாக
கருதப்படுகிறது. இவ்விஷயங்கள் மனம் சார்ந்த விசயங்கள் உடலை அதற்கு தகுந்தாற்போல்
பழக்குவது தான். நாம் கண்ட கேட்ட மகான்கள் சித்தர்கள் யோகிகள் விஞ்ஞானிகள் யாவரும்
ஒரு பொருளில் கருத்தைச் செலுத்த வல்லவர்கள் அதனாலேயே அதற்கு பெரும் பலன் கிடைத்தது
நம் மனமானது ஆற்றல் மிக்கது இது நம் அன்றாட வாழ்வில் பல நேரங்களில் நடந்தாலும் நம்
மனதின் ஆற்றலை நாம் ஏற்பது இல்லை கருத்தில் கொள்வதும் இல்லை மேற்கண்டவாறு 12
தாரனைகள் மனம் ஒரு நிலையில் அதாவது 2-3 நிமிடங்கள் இருக்குமாயின் அது ஒரு தியானம்
என்றும் அந்த தியானம் ஒரு அரை மணி நேரம் இடைவிடாமல் இருந்தால் அது ஒரு சமாதி
என்றும் சொல்லப்படும். ஏன் இவ்வாறு சொல்லப்படுகிறது என்றால் தியான நிலையை
படிப்படியாக உயர்த்தவேண்டும். அதற்கு சுவாசத்தின் கும்பகத் தன்மையையும்
படிப்படியாக உயர்த்த வேண்டும் இல்லை எனில் அது பல உடல் கோளாறுகளையும், உயிர்
அபாயத்தையும் உண்டாக்க ஏதுவாகும். இந்த தியானத்தின் போது நம் மனத்தை ஒவ்வொரு
இந்திரியங்களின் செலுத்தி அவற்றின் பயன்கள் அவற்றின் செயல் ஆற்றலை பெருக்கலாம்.
இனி அடுத்து சமாதி பற்றி பார்ப்போம்.
சமாதி
:-
ததே
வார்த்த மாத்ர நிர்ப்பாஸம் ஸ்வரூப சூன்ய மிவ
ஸமாதி:
சமாதி
என்பது நாம் எண்ணிய அல்லது மனதில் உருவாக்கிக் கொண்ட குறிக்கோள் மீது நிலைப்படும்
போது புலன்களின் செயல்களில் இருந்து விடுபட்டு இருக்கும் இது ஒருவித தூக்க
நிலையாகும் இதில் குறிக்கோளுடன் ஒன்றிவிடுவ்தாகும் இந்த நிலையில் நாம் எதன் மீது
குறிக்கோள் கொண்டோமோ அதன் அல்லது அதற்கான அறிவு அதிகிரிக்கிறது. இன்னும் இது பற்றி
அறிந்து கொள்ள யோக நூல்கள் மனசக்தி பற்றிய நூல்களில் இருந்து அறிந்து கொள்ளவும்.
இந்த சமாதி நிலையில் தொடர்ந்து இருந்தால் 21 நாட்களுக்குமேல் இந்த உடலில் இருந்து
உயிர் பிரிந்துவிடும். இது வரை அட்டாங்க யோகம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து
கொண்டோம். இனி இதைக்கொண்டு சித்தர்கள் எவ்வாறு என்ன சொல்கிறார்கள் என்பது பற்றிப்
பார்ப்போம்.
வாமத்தில்
ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏம்
உற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக்
காமுற்ற
பிங்கலை கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால்
எட்டெட்டுக் கும்பிக்க உண்மையையே
திருமந்திரம் – 566
இடது
மூக்கில் 16 மாத்திரை அளவு நேரம் உள்ளிழுத்து மூலக்கனலை எழுப்பும் வகையாக 64
மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை கால அளவு மெதுவாக
வெளியிட வேண்டும். இதுவே அடிப்படையாகும் இந்த அளவை எட்ட படிப்படியாக உயர்த்தவேண்டும்.
இனி போகர் 700 என்னும் நூலில் இருந்து கடவுள பற்றிய கருத்தை பார்த்து பின் மீண்டும்
யோகச் செயல் பாடு பற்றி அறியலாம்.
கருவான
பஞ்சபூதச்சரக்கு மெங்கே
கல்லான
அண்டமெங்கே வீரமெங்கே
கருவான
வழலை யெங்கே முப்புவெங்கே
கரைகாண
கருவிபுறக்கருவி யெங்கே
கருவான
பிண்ட அண்டரண்ட மெங்கெ
காரமெங்கே
சாரமெங்கே புரமெங்கே
கருவான
மனமெங்கே பாசமெங்கே
காயத்தின்
கருவெங்கே கண்டுபாரே
போகர் – 700 – 477
பாரப்பா
பஞ்சமெனுந் தேவரெங்கே
பறையெங்கே
சிவமெங்கே யொளிதானெங்கே
பாரப்பா
பரனெங்கே பாதமெங்கே
பகரு
முதலெங்கே ரவிமதியுமெங்கே
பாரப்பா
வாசியெங்கே கலைதானெங்கே
பழுதில்லா
ஞானமெங்கே யோகமெங்கே
பாரப்பா
சரியை யெங்கே கிரியை யெங்கே
பகராதியநாதி
வஸ்துங் குறித்துப் பாரே
போகர் 700- 478
குறித்துப்பார்
இவை யெல்லாந் தனக்குள்ளே
குறியறியாதுலகத்தில்
திரிந்தார் கெட்டார்
குறித்து
நின்ற தன்னையுந்தானறியமாட்டார்
குறியறிந்தோர்
சிவயோகி சித்தராவர்
குறித்து
நின்ற நாதவிந்தாலால்லாமச்சு
கோடான
கோடி சித்துமாடலாச்சு
குறித்து
நின்ற விந்து நிலை கானார்கானார்
கூர்ந்துவரு
நோய்களை நீ யோர்ந்துகேளே
போகர் – 700 -479
கேளப்பா
நாதத்தில் விந்துபுக்கிக்
கெட்டி
யுடனாலாயிரங் கணிதமச்சு
தாளப்பா
கொட்டியதோர் விடங்கள்
தசநாடி
யெலுபத்தீராயிரத்தில்
வேளப்பா
அடங்கிநின்ற தேகமெல்லாம்
விளைந்ததடா
அவரவர்கள் வினையாற்கானுஞ்
சூழப்பா
நோய்விளைந்த விபரம்பாரு
சுழுமுனை
பற்றி நின்ற நிலைநாட்டாரே
போகர் 700 – 480
மேற்கண்ட பாடலில் கருவான பஞ்சபூத சரக்கு எங்கே
என்று ஒரு கேள்வியை தொடுத்து ஒவ்வொன்றாக அண்டம், பிண்டம், வீரம், முப்பு, காரம்,
சாரம், வழலை, அண்டக்கல் உடலின் அடிப்படைக் கரு எங்கே? பரை, சிவம், ஒளி, சூரிய,
சந்திரர், வாசி, ஞானம், சரியை கிரியை பதினாருகலை, அநாதி வஸ்த்து என்றெல்லாம்
சொல்லப்படுவை எங்கே உள்ளது இது குறித்து ஆய்ந்து பார். என்று சொல்லி அடுத்த
பாடலில் இவை பற்றி சித்தர் சொன்ன குறிப்புகள் அறியாது காடு மேடு சுற்றி கண்டதைக்
கொன்றும் கண்ட பொருளை எல்லாம் சுட்டும் தன்னையும் அறியாமல் கெட்டு அழிந்தார்கள்
மூடர்கள் இவை எல்லாம் உனக்குள் உள்ளது. இந்தக் குறிப்பு அறிந்தோர் சிவயோகி,
சித்தராவர். இவை எல்லாம் எதனால் உண்டாகியது நாதம் என்ற கருமுட்டையாலும், விந்து
என்ற அனுவாலும் ஆகியது. இதனால் கோடானுகோடி பொருள்களும் உண்டாச்சு. நாதத்தில்
(முட்டையில்) விந்து அணு சேர்ந்ததால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோன்றலாயின.அதில்
தசநாடிகளும் எழுபத்தி ஈராயிரம் நாடி நரம்புகளும் கொண்ட ஆயிரக்கணக்கான சரிரங்களும்
அவர்கள் செய்த செயலுக்கு ஏற்ப உண்டாயிற்று இவை எல்லாம் அறிய சுழுமுனையில் மனத்தை
செலுத்தி பார் எல்லாம் அறியலாம். இனி அடுத்து அகத்தியர் பரிபூரணம் – 400 என்பதில்
இருந்து பார்ப்போம்.
தானான
ஆதார சொருபந்தன்னைச்
சமர்த்தாகத்
தானறிந்து தியானம் செய்து
தேனான
புலத்தியனே அறிவால்தானும்
தேகத்தில்
உயிர்சிவமாய்த் தெரிந்துகொண்டு
வானான
கேசரியில் மனக்கண் வைத்து
மனங்கனிந்து
ஒங் றீங் அங் என்றோத
கோனான
ஆதார புசைதானும் கோடான
பூசைசெய்த
பலத்துக் கொப்பே
அ பரிபூரணம் – 400 – 378
நம் உடலுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய பொருள்
எது என்பதை கண்டு அந்த ஆதாரப் பொருளையே தியானம் செய். புலத்தியனே நீ அறிவு கொண்டு
ஆராயந்தாயானால் நம் உடலை இயக்குகின்ற உயிரே ஆதாரப் பொருளாகும். இந்த பொருளே சிவம்
என்றும் ஆத்மா பரமாத்மா என்றும் அறிந்து அதைக் காண வானம் என்று சொல்லப் படுகிற நம்
தலை உச்சி ஆகிய கேசரியில் (கேசம் என்றால் முடி) மனத்தை செலுத்தி மனத்தை அன்புடன்
வைராக்கியத்துடன் ஒரே சிந்தனையாக வைக்கவேண்டும். அப்போது சுவாசத்தை உள்ளே
இழுக்கும் போது ஒங் என்ற வார்த்தையை எண்ணிக்கைக் (16) அளவுப்படி மனதில் எண்ணியவாறு
இழுக்கவேண்டும். பின் (64) எண்ணிக்கை அளவு றீங் என்று எண்ணிக்கை மனதில் எண்ணி
சுவாசத்தை நிறுத்தவேண்டும், பின் (32) எண்ணிக்கை அளவு அங் என்ற வார்த்தையை
எண்ணியவாறு வெளிவிடவேண்டும். இதில் கவனித்தீர் களானால் உள் இழுக்கும் சுவாசத்தின்
எண்ணிக்கை குறைவாகவும் வெளிவிடும் சுவாசத்தின் எண்ணிக்கை அளவு அதிக மாகவு
இருக்கும் இது ஏன்னென்றால் உள்ளுக்குள் சுவாசத்தை அந்த எண்ணிக்கை அளவுக்குள்
இழுத்து நிரப்ப வேண்டும் என்றால் சிறிது வேகமாக இழுக்க வேண்டும். அதே நேரத்தில்
வெளிவிடும் போது மெதுவாக விடவேண்டும் அப்போது தான் எண்ணிக்கை சரியாக வரும். இவை
எல்லாம் படிப்படியாக உயர்த்திச் செய்ய வேண்டும். இது குறித்து திருமூலர் சொல்வதைப்
பார்ப்போம்.
ஏற்றியிறக்கி
யிருகாலும் பூரிக்குங்
காற்றைப்
பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப்
பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை
யுதைக்குங் குறியதுவாமே
திருமந்திரம் – 564
சுவாசித்து
உள்ளே இழுத்தும் வெளியில் விடுவதும் பின் அதை உள்ள இருக்கச் செய்வது மான கணக்கை
அறிந்தவர்கள் எமனை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆவர். இன்னும் ஒருபாடல்
போகரிடம் இருந்து பார்ப்போம்.
வெளியான
வாசியைத்தான் வரவழைத்து
வீட்டுக்குளங்கே
வைத்திட்டுத்தான்
தனியாக
வைத்திட்டுச் சாதித்தாக்கால்
சாதித்து
வாசியும்மீசனும் மொன்றாகும்
வளியாக
வாசியைப் போல் சித்தொன்றுமில்லை
மாசித்து
சிவனவனாம் வாசியொன்றில்
ஒளியாக
வாசியது உயிரை மீட்கும்
உறுதியாம்
சிவயோகத்து உண்மைதானே
போகர் 7000 – 1வது காண்டம்- 102
சுவாசமாகிய
காற்றை உள்ளே இழுத்து நம் உடலாகிய வீட்டுக்குள் வைத்து அதை வெளிவிடாமால்
சாதித்தால் வாசியும் சிவனும் ஒன்று என்று அறியலாம் எனவே அதைப்போல் சித்து வேறு
ஒன்றும் இல்லை அந்த வாசியை மனதை வைத்து ஒளியதை தரிசிகில் அதுவே உயிரை மீட்க்கும்
சிவயோகத்துக்கு இக் காற்றே ஆதாரமாகும் இது உண்மையாகும்.
உயிர்
பற்றி விஞ்ஞானம் :-
உலகத்தில் இப்போது உள்ள செல்கள் தோன்றி
கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. உயிரினங்கள் தோன்றும் போது எப்படியிருந்தன
என்பதை அறிய வேண்டும். அத்துடன் பல உயிரினங்கள் இந்த நீண்டகால வரலாற்றில் அழிந்து
விட்டன. அவைகளைப் பற்றிய எவ்விதச் செய்தியும் அறிய முடியவில்லை ஆனால் பூமியில்
நமக்கு கிடைக்கும் சில புதை படிமங்களில் இருந்து சில உயிரினங்களின் தொன்மை அறிய முடிகிறது. இதைத் தவிர உயிர் எவ்வாறு
தோன்றியது என்பதைத் திட்டமாகசொல்ல முடியவில்லை. ஆரம்ப காலத்தில் தோன்றிய
உயிரினங்களின் படிமானங்கள் கிடைத்தால் ஆராய்ச்சிக்கு பயன் படும். அது இல்லாமல்
நாம் விஞ்ஞானத்தின் முன் யூகம் செய்தால் அது நிலைக்காது. ஆதியில் உயிரினங்கள்
கடவுள் படைத்தார் என்பது ஒரு மரபான கொள்கை. இது தவிர இரண்டு முறைகளில் உயிரினம் உலகத்தில் தோன்றியது என்று
சொல்லப்படுகிறது. ஆர்றேனியுஸ் ( Arrhenius ) என்ற சிறந்த வேதியல் ஆராச்சியாளார் தத்துவப்படி
பொருள்களில் மின்சாரம் ஏரிய துகள்களாக இருக்கலாம் என்றார். அப்பகுதிக்கு அயனிகள் (Iorns) என்னும்
பெயரை வழங்கினார். 1908 ல் ஆர்றேனியஸ் இதர கோள்களில் இருந்து விண்வெளியில் சில
உயிர்வித்துக்கள நம் வாழும் இவ் உலகிற்கு வந்து இருக்கலாம் என்றார்.
இக்கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக்
கடப்பதற்கு வேண்டிய சக்தி சூரிய ஒளியில இருந்து அவை பெற்று இருக்கலாம் என்று
நினைத்தார். வெட்டவெளியில் இந்த விதைகள் ஆல்ஃபா சென்டரை ( Albha centauri)
என்ற நட்சத்திரத்தில் இருந்து 9000
வருடங்களில் வந்து சேர்ந்து இருக்கலாம் என்று சொன்னார். இந்தக் கோட்பாட்டை
நிருபிப்பது சிரமம். இப்போது பூமியைச் சுற்றி ஒரு சக்தி நிறைந்த வான் ஆலன் பெல்ட்
(Van Allenbelt) என்ற அயனி மண்டலம் இருக்கிறது என்று அறிகிறோம்.
இதுவும் ஒரு அறிவியளாரின் பெயர் தான். இந்த மண்டலத்தில் ஊடுருவி உயிரினம் பூமியை
அடைய முடியாது இதனால் ஆர்றேனியஸ் கோட்ப்பாடு ஏற்கத்தக்கது அல்ல. அத்துடன்
ஈயத்தகட்டினால் மூடப்பட்டிருந்தால் ஒழிய ஆகாயத்தில் உள்ள சூழ்நிலையில் உயிர்
வித்தானது கெட்டுவிடும் எனவே அவரின் இக் கருத்து சரியானதாக இல்லை.
மற்றும் பூமியில் உயிர் ஆதியில் தோன்றிய
விதத்தை பற்றி ஊன்றிக் கவனிக்கத்தக்க கோட்ப்பாடுகள் இரண்டு உண்டு. முதலாவது
உயிரற்ற சடப்பொருள்கள் இணைந்து ஆதி உயிரானது உண்டாயிற்று. என்பது ஒரு கோட்ப்பாடு.
இக்காலத்தில் உள்ள தாவரங்கள் அவ்வாறுதான் செய்கின்றன. அவ்வாறு தோன்றிய உயிரணுக்கள்
பின்னிப்பிணைந்து புதிய குருத்துக்களை உண்டு பண்ணும என்சைம்கள் அவற்றில் நிறைய
இருந்து இருக்கவேண்டும். ஆதலால் உயிர் தானாக உயிரற்ற பொருளில் இருந்து தோன்றியதா
என்பது தெரியவில்லை. அவ்வாறு தோன்றியிருந்தால் அத்தக் கடவுளின் சிருஷ்டி என்றே
சொலவேண்டும். ஆனால் இதை அறிவியல் ஒப்புக் கொள்ளது. உயிரின் தோற்றம் பற்றி மற்றொரு
கொள்கை உண்டு. முற்காலத்தில் சமுத்திரத்தின் அடியில் அணுக்கள் இணைந்து சிக்கலாக
அமைந்த கூட்டுப் பொருள்களை இயற்றின, அந்த அடிப்படையே உயிரினத் தோற்றங்களாக
உண்டாயின. இந்த உயிரினப் பொருள்கள் மற்றப் பொருள்களோடு இணைந்தன. ஆனால் உயிரில்
உள்ள ஆக்கும் சக்தி இவைகளுக்கு இல்லை. இந்த உயிரினப் பொருள்கள் வேதியல்
பரிணாம மாற்றத்தால் ஏற்பட்டன என்று
ஒருசாரார் கருதுகின்றனர். உயிரியல் ஆய்வுக்கு இந்தக் கருத்தே பொருத்தமாக
இருக்கிறது.
சென்ற மூன்று நூறாண்டுகள் முன் வரை (17)
இப்போது உலகில் காணப்படும் உயிரினங்கள் எல்லாம் தாமாகவே உண்டாயின என்ற கருத்தே
இருந்தது. மினர்வா என்ற என்னும் கிரேக்க தேவதை முழுவளர்ச்சி பெற்ற உருவத்தோடு ஸியூஸ் என்னும்
கிரேக்க தேவனின் தலையிலிருந்து தோன்றியதாக பழங்கதை கூறுகிறது. இது போல் கிருத்துவ
மதத்தில் ஆண்டவனால் ஆதாமும் அவனினில் இருந்து ஏவாளும் தோன்றியதாக சொல்கிறது. அது
இந்தியாவில் உள்ள இந்து மதத்தில் பிரம்மாவின் தலையில் இருந்து பிராமணனும்,
மார்பில் இருந்து சத்திரியனும், தொடையில் இருந்து வைசியனும், காலில் இருந்து
சூத்திரனும் தோன்றியதாகவும்
சொல்லப்பட்டுள்ளது. இதில் இருந்து ஏற்ற தாழ்வுகளோடு பிறப்பிக்கப் பட்டதாகவும்
தங்கள் மனம் போனவாக்கில் எழுதியுள்ளனர். இக் கருத்தைக் சொல்லும் கீதை உயர்ந்த
நூலாகவும் கொண்டாடுகின்றனர். இன்னும் சில நூல்களில் ஆதியில் விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும்
அப்போது அவரது தொப்புள்ளில் இருந்து ஒரு தாமரை உண்டானதாகவும், அதில் பிரமன்
தோன்றினார். அவர் உயிர்களை படைத்தார் என்று எழுதி வைத்தனர். இவற்றை எல்லாம் அறிவியல் ஏற்காது.
இவைகள் மனிதக் கற்பனையே இக்கதைகளை யாரும்
நிருபிக்க முடியாது. ஆனால் ஆதி தோற்றத்திற்கு இக் கதைகளை சொலி அவர்களை
நம்பவைக்கவும், மக்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் மதவாதிகள் இக்
கதைகளை. பயன் படுத்திக் கொண்டனர். இதற்ககாக ஒருசாரார் மட்டுமே கல்வி கற்க வேண்டும்
என்றும் மற்றவர்கள் கல்வி பயிலக் கூடாது என்று சொலி வந்தார்கள் தங்களின்
ஆளுமைக்காக இன்றும் அக்கதைகளில் பலவித கருத்துகளை தத்துவங்கள் என்ற பெயரில் பின்னிப்
பிணைந்து சொல்லி வருவது உள்ளது. நம் ஐம புலன்களுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படுவது
மாக இருக்க வேண்டும். 1668 ல் பிரான்சிஸ்கோ ரீடி (Francesco Redi)
என்னும் டாஸ்க்க்னி நாட்டு மருத்துவர்
இந்த பூச்சிகளும் புழுக்களும் எவ்வாறு உண்டாயின என்பதை ஆராய்ந்து கண்டு
பிடித்தார். ஈக்கள் அழுகும் மாமிசத்தில் சாணத்தில் உணவுப்பொருள்களில்
முட்டையிடுவாதால் உண்டாகின்றன என்று சொன்னார். (இதையே நம் வேதங்களில் நன்கு வித
பிறப்புகள் பற்றிக் சொல்லும் போது வியர்வையில் இருந்து பிறப்பதாக சொன்னார்கள்
அவர்களுக்கு இந்த பூஞ்சை களுக்கான காரணங்கள் தெரியாது எனவே அவர்கள் அவ்வாறு
சொன்னார்கள்) அந்தக் காலத்திய அறிஞர்கள் அவருடைய முடிவுகளைக் கண்டனம் செய்தார்கள்.
இதற்கு காரணம் சாத்திரங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு அவருடைய கொள்கை
மாறுபட்டது தான். நூறு வருடங்க்களுக்கு பின்னர் (1765) மதவாதிகளின் சொல்லை
உயிர்கள் தாமாக தோன்றுகின்றன என்பதை “ அபேஸ்பாலன்த் ஸானி” (Abbe Spallan Zani) என்பவர் நுண்ணிய
உயிர் அணுக்கள் தாமாகவே தோன்றுகின்றன என்பதை மறுத்துக் கூறவேண்டியிருந்தது.
இறைச்சியையும் தாவரச்சாரையும் நன்றாகக் கொதிக்க வைத்து காற்றுப்புகாமல் அடைத்து
விட்டால் நுண்ணிய கிருமிகள் அவற்றிலிருந்து உண்டாகவில்லை. என்று சொன்னார். இவருடைய
முடிவுகளை அன்றைய நாளில் பலரும் ஆட்சேபித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பின்
பகுதியில் பாஸ்டியர் (Fasteur)
பலர் அறிய சோதனைகளைச்
செய்து காட்டினார். அதில் உயிர்கள் தாமாக உண்டாவது இல்லை என்ற உண்மையை
நிலைநாட்டினார்.
உலக
வரலாற்றில் 1820 – 1860 வரையிலான காலக்கட்டம் புதிய வழியினையும் அது வரை நம்பி
வந்த பழங்கால கற்பனை நிலைப்பாட்டினை உடைத்து புது உலகினை காண வகைசெய்தது. 1820 –
ஃபிரடரிக் வாலர் என்னும் மருத்துவ மாணவர் இவர் க்மேலின் (Gmelin) என்ற அவரின் இரசாயன ஆசிரியரின் சொல்லின்
படி மருத்துவத்தை விடுத்து இராசயன ஆய்வில் ஈடுபட்டார். அவர் அது வரை வைட்டாலிசம்
கொள்கையை தம் கண்டுபிடிப்பால் அடியோடு அசைத்துவிட்டார். அதுவரை உயிர்பிராணிகள்
மட்டுமே உடலில் இருந்து வெளியேற்றும் சிறுநீரில் உள்ள யூரியா எனப்படும் வேதியல்
பொருளைக் கண்டுபிடித்தார். யூரியா எனப்படும் பொருள் உயிர் பிராணிகளின் கழிவுப்
பொருள் அதுவரை உயிர் சக்திகாளால் மட்டுமே உண்டாக்கப்படும் பொருளாக
கருதப்பட்டுவந்தது. அத்தகைய பொருளை இராசயனசாலையில் உண்டாக்க முடிந்தது மிகப்பெரும்
வேதியல் மாற்றத்தை தோற்று வித்தது. இவர்தான் அலுமினியத்தையும் கண்டுபிடித்தார்.
தாவரத்திலோ, மிருகத்திலோ இயற்றப்படும் ஒரு பொருளைப் பரிசோதனை சாலையில் உண்டாக்க
முடியாது என்றும் இது கடவுள் செயல் என்றும் கருத்தியல் கொண்ட காலத்தில் இவரது
யூரியா எனப்படும் பொருள் கண்டு பிடிப்பானது, இன்றைய வைட்டமின் மற்றும் உயிர்
பொருள்களின் செல்களில் உள்ள பொருள்களையும், அது உண்டாக்கும் பொருள்களையும்
கண்டுபிடிக்கவும் உண்டாக்கவும் இன்றைய கால மாற்றங்களை தோற்றுவித்தது. அதுபோல் 1897
ல் பாஸ்டியர் நொதித்தலைக் குறித்த கண்டுபிடிப்பு அதுவரை சொல்லப்பட்டு வந்த உயிர்கள்
தாமாக உண்டாகின்றன என்பதை மறுத்ததுடன் என்சைம்களின் உதவியினால் உயிரியலில்
ஏற்படும் வேதியல் மாற்றங்களை உலகுக்கு புதிய
பாதையை தோற்றுவித்தது. அதே 1858 – 1859 ல் வால்ஸ் (Wallace),
டார்வின் (Darwin)
இருவரின் இயற்கையில் செயல்படும் பரிணாமக்
கொள்கையின் ஆய்வு முடிவுகளும் உலகின் அதுவரைக்கும் நம்பப்பட்டு வந்த கொள்கைகளை
தகர்க்க ஆரம்பித்தது. 19 நூற்றாண்டின் பின் பகுதியில் அக்காலத்துக் ஒத்த சூழ்நிலை
மனப்பான்மையால் உதித்து நிலவி வந்த கருத்துக்களின்படி உயிரினத்தின் தோற்றம் பூமி
உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியடைந்து வந்தபோது வேதியல் மாற்றத்தின்போது
உயிர்ப்பொருள் அமைந்தது என்பதுதான். எர்னஸ்ட்டு ஹெக்கல் என்ற தத்துவ ஆசிரியர் 1868
ல் “சிருஷ்டியின் வரலாறு” என்ற நூலில் பழங்காலத்து கடல்களில் கரைந்து
இருந்த பொருள்களிலிருந்து ஒரே சீரானதும் குறிப்பிட்ட அமைப்பு ஏதும் இல்லாததும் மான
புரதப் பொருள் உண்டாயிருக்க வேண்டும். அதுவே உண்மை உயிர்ப் பொருளாகவோ போலி உயிர்
பொருளாகவோ இருக்கலாம் என்றார். டார்வினும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்று
இவர் 1871 ல் எழுதிய கடிதத்தின் வாயிலாக தெரிகிறது. அக்காலத்தில் உயிர்கள்
உண்டானதையும் ஆனால் அதே சூழ்நிலையில் இப்பொழுது புதிதாக உயிரினம் உண்டாகாமல்
இருப்பதையும் சொல்லியிருக்கிறார்.
அவர் எழுதியதாவது :- “ முதல் முதலில்
உயிரினம் தோன்றும் போது இருந்த சூழ்நிலை இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருந்து
இருக்கவேண்டும். ஒருசிறிய குளத்தில் அமோனியா பாச்பரிக் அமிலம் ஒளி, உஷ்ணம்
மின்சாரம், யாவையும் சேர்ந்து ஒரு புரதப் பொருள் உண்டாகி, அது பலவேறு மாறுதல்களை
அடையும் நிலையில் இருப்பதாக நாம் நினைத்துப் பார்த்தால் இந்தக் காலத்தில் அத்தகைய பொருள் உடனே
அளிக்கப்படலாம். அல்லது பிற உயிர்களால் உட்கொள்ளப்படும். ஆனால் உயிர்கள் தோன்றியிராத
அக்காலத்தில் இவ்வாறு அழிக்கப்பட்டுயிருக்க முடியாது.”
மேற்கண்டவாறு டார்வினும், ஹெக்கலும்
சொல்வது சிந்திக்கத்தக்கது அவர்கள் உயிரினங்கள் புரதங்களால் ஆக்கப்பட்டவை என்று
சொல்லியிருப்பது என்சைம்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு இருபது ஆண்டுகள் முந்திய காலமாகும்.
வேதியியல் பொருள்கள் சேர்ந்து பழங்காலத்தில் கடல்களில் புரதப்பொருள் எற்பட்டது
என்றால் அப்பொழுது அக்கடல்களில் அமினோ அமிலங்கள் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு
அமினோ அமிலங்கள் உண்டாகியிருக்க முடியுமா என்று அறிவதற்கு.பல பரிசோதனைகள்
செய்யப்பட்டன. பூமி உஷ்ணம் தணிந்து வந்த காலத்தில் பல வாயுக்கள் பூமியைச் சுற்றி
இருந்திருக்கும். அத்தகைய வாயுக்களுக்குள் மின்சாரத்தைப் புகுத்தியும் புற
ஊதாக்கதிர்கள் செலுத்தியும் அந்த வாயுவிலிருந்து அமினோ அமிலங்களோ அல்லது
சர்க்கரைப் பொருளோ உண்டாகின்றனவா என்று பார்த்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும்
உண்டாகவில்லை. ஆனால் அவ்வாறு உண்டாகும் பொருள்களைப் பாகுபடுத்தி அறியக்கூடிய
முறைகளும் சரியாக இல்லை. அத்துடன் எல்லா ஆராய்ச்சியாளர்களும் அக்காலத்தில்
கார்பனானது கார்பண்டை ஆக்சைடாக இருந்து இருக்கவேண்டும் என்று தவறாக ஊகித்தனர்.
1936 ல் ரஷிய உயிரியல் ஆய்வாளார் ஒபாரின் என்பவர்
“உயிரின்தோற்றம்” என்ற நூல் எழுதினார். உயிரின் தோற்றத்தைப் பற்றி
வெறும் ஊகங்களாக அல்லாமல் அப்பொழுது கிடைத்த சில உண்மைகளிலிருந்து இந் நூல்
எழுதப்பட்டது. இது ஒரு அறிய நூலாகும். முதலில் பூமியைச் சுற்றிலும் இருந்த ஆகாய
மண்டலத்தில் கார்பனானது கார்பன் டை ஆக்சைட் வாயுவாக இல்லாமல் ஹைட்ரோ கார்பன்களாக
ஒபரின் முடிவு செய்திருந்தார். ஹைட்ரோ கார்பன்கள் கார்பன் அணுவுடன் ஹைட்ரஜன் அணு
சேர்ந்து இணைந்த சங்கிலித் தொடர்போல்
இருந்து இருக்கவேண்டும். இந்த ஹைட்ரோ கார்பன்களிலிருந்து அமிலம் ஆல்டிஹைட்,
ஆல்க்கஹால் பல உண்டாகலாம். அவற்றில் சில அமோனியவுடன் சேர்ந்து அமினோ அமிலங்கள்
உண்டாகலாம். அமினோஅமிலங்கள் உயிரற்ற பொருள்கள் என்று தோன்றுவதை
ஹரால்டே யூரி என்பவர் கண்டுபிடித்தார் இரண்டாவது உலகயுத்தத்திற்கு பின்னர் இவர்
தமது விஞ்ஞான வாழ்க்கைக்குத் திரும்பியதும் முன் ஆராய்ந்து வந்த ஐடோப்புகளைப்(isotopes)
விட்டு விட்டு கிரகங்கள் எவ்வாறு
தோன்றின என்பதை ஆராயலானார். ஐசோடோப்புகளைப்
பற்றி சிறந்த ஆராயச்சிகள் போலவே கிரகங்களை பற்றியும் சிறந்த ஆராய்ச்சிகள்
செய்தார். ஓபரின் ஆராய்ச்சி பற்றி யூரிக்கு ஒன்றும் தெரியாது. இருந்தும்
பழங்காலத்தில் ஹைட்ரஜன் அதிகமாக இருந்த பொழுது நிலையான கார்பன் மெத்தேன் (methane)
ஆக இருந்து இருக்கவேண்டும் என்று
நினைத்தார் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு கார்பன் அணுவோடு சேர்ந்து இந்த மெத்தேன்
உண்டாகிறது. ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரோ கார்பன் இதுவாக இருக்கவேண்டும். அது போலவே
நைட்ரஜனும் மூன்று ஹைட்ரஜன் அணுக்களோடு இணைந்து அமோனியா உருவத்தில் இருந்திருக்க
வேண்டும். இந்த இரண்டாவது கருத்தும் ஓபரின் கருத்தை சார்ந்து இருக்கிறது.
கிரகங்களைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தை வான சாத்திர பௌதிக இயலால் அறியலாம்
அதிலிருந்து ஓபரின், யூரி என்னும் இருவரின் கருத்தும் சரி எனத் தெரிகிறது.
வியாழன், சனி, முதலிய கிரகங்களை சுற்றியுள்ள வாயு மண்டலத்தை நிறமாலைகளின் மூலமாக
ஆராயும் போதுஅங்கு மெத்தேன், அமோனியா இருப்பதை அறியலாம். அங்கு அந்த பழைய நிலை
இருப்பதற்கு மூன்று காரணங்களுடன் அங்குள்ள வெப்பநிலை, பூமியின் வெப்பநிலையை
விடக்குறைவானதால் இரசாயன மாறுதல்கள் மெதுவாகவே நடைபெறும், சூரியனில் இருந்து இந்த
கிரகங்கள் வெகுதொலைவில் இருப்பதால் அங்கு புற ஊதாக் கதிர்கள் விழுவதும் குறைவு.
கடைசியாக எடையில் அக்கிரகங்கள் பூமியை விட அதிகமானதால் அவற்றுக்கு ஈர்ப்பு சக்தி
அதிகமுண்டு. அவ்வாறு ஈர்ப்பு அதிகமாக இருப்பதால் ஆதிகாலத்திய வாயு மண்டலத்தை
இழக்காமலும் மாற்றாமலும் வைத்திருக்கின்றன. முன் கூறிய சோதனையில் செயற்கையாக அமினோஅமிலங்கள்
உண்டாக்க முடியாததின் காரணம் கார்பன்டை ஆக்சைடு வாயுவை உபயோகித்ததே இதற்குப் பதில்
மெத்தேன் உபயோகித்து இருந்தால் அமினோஅமிலங்கள் உற்பத்தி ஆகியிருக்கலாம் 1952-ல் டாக்டர் யூரி எழுதியதாவது நீரும் மெதேனும்
கலந்த கலவையில் சூரிய ஒளியில் இருந்து உண்டாகும் புற ஊதாக் கதிர்கள் போன்ற
கதிர்களை செலுத்தினால் கார்பன் கொண்ட மூலக கூறுகள் உண்டாகும் என்பது தெரிகிறது.
இக்கலப்பின் போது ஏற்படும் மின் இயக்கங்களை ஆராய வேண்டும் வாயு குறையும் போது மின்
அதிர்ச்சியில் உண்டாகலாம் என்று எழுதினார். அத்தகைய சோதனைகளும் வெற்றிகரமாக செய்து
முடிக்கப்பட்டது. யூரியினுடைய மாணவர் டாக்டர் இச்டான்லி மில்லர் என்பவரால்
பழங்காலத்தில் பூமியை சுற்றியிருந்த ஆகாயத்தைப் போல தம்முடைய சோதனைச் சாலையில் ஒரு
வாயு மண்டலத்தை நிறுவினார். அதனுள் மின் சக்திகளை புகுத்தினார். இவ்வாறு செய்யப்பட
சோதனைக் கருவிக்குள் அமோனியா, மெத்தேன், ஹைடிரஜன் என்னும் மூன்று
வாயுக்களையும்,நீரையும் வைத்தார். கண்ணாடியால் அமைந்த அந்தச் சோதனைக் கருவிகள்
நீரை ஆவியாக ,மாற்றவும் பின்னர் அதை நீராக குளிரச் செய்யும் தன்மை உடையது நீர்
ஆவியாகும் பொழுது மூன்று வாயுக்களும் சேரும் இடத்தில் மின் கதிர்களை புகுமாறும்
செய்தார். இவ்வாறு ஆக்சிஜன் இல்லாது நிலையில் இந்தச் சோதனை ஒருவாரம்
நடத்தப்பட்டது. ஒருவாரத்க்குப் பின் சோதனை நிறுத்தப்பட்டது. வெப்பம் தணிந்த
பின்னர் திறந்து வாயுக்கள் வெளியேறப்பட்டது. பின்னர் நீர் ஆவியாக மாற்றி வெளியேறப்பட்டது.
அடியில் ஒரு திடப்பொருள் தங்கியிருந்தது. திடப்பொருளே இல்லாத அந்த இடத்தில்
திடப்பொருள் உண்டானதற்கு காரணம், அதனுள் ஏற்பட்ட இரசாயன மாற்றமாகத்தான்
இருக்கவேண்டும். இவ்வாறுபுதிதாகஉண்டான திடப்பொருளை ஆராய்ந்ததில் பல அமிலங்களும்
கார்பனும் சேர்ந்த பல கலப்புப்பொருள்கள் காணப்பட்டன. இது விஞ்ஞான உலகில் ஒரு
முக்கியமான விபரமாகும்.ஆனால் இதன் பின் ஒரு இளம் உயிரியல் இராசயணியானவர் இதே
வாயுக் கலவை மூலக்கூரோடு இரும்பு சல்பைடைச் சேர்த்து அவற்றின்மீது புற ஊதாக்
கதிர்களை செலுத்தினால் பீனைல் அலனினும், கந்தகப் பொருளை மெத்தியோனின் போன்ற சில
அமினோஅமிலங்கள் உண்டாகிறது. அத்துடன் அமினோஅமிலங்கள் சிக்கலாக இணைந்த வேறு
பொருள்களும் உண்டாகின்றன. இந்தக் கூட்டுப் பொருள்கள் பாலிப் பெப்டைஸ் (poly
peptides ) என்னும் பொருளாக உண்டானது. இது ஒரு
முக்கியமான நிகழ்ச்சியாகும். அமினோஅமிலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு
பாலிபெப்டைட் ஆகின்றன. இதே இணைப்புத்தான் புரதப் பொருளிலும் இருக்கிறது. பாலி பெப்டைட் உண்டானது போலவே ஒரு பெரிய புரத மூலக்கூறு
உண்டாகலாம் இதற்கு அதிக நேரம் ஆகலாம். மேற் கூறப்பட்ட ஆராய்ச்சிகள்
முக்கியமானவையாகும் பினைல் அலனினுடைய அமைப்பு மிகவும் சிக்கலானது. அதில் 6 கார்பன் அணுக்கள்
வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. அந்த கார்பன் அணுக்களில் 5 ந்துடன் ஒவ்வொன்றிலும் ஒன்று வீதம் 5 ஹைடிரஜன் அணுக்கள் இணைந்து இருக்கின்றன 6 வது கார்பன் அணுவோடு 3 கார்பன் அணுக்கள் இணைந்து ஒட்டிக்கொண்டு
இருக்கிறது. இவற்றில் இரண்டாவது கார்பன் அணுவோடு ஒரு ஒரு நைட்டிரஜன் அணுவும்
இரண்டு ஹைடிரஜன் அணுவும் சேர்ந்த அமினோ மூலக் கூறு இணைந்து இருக்கிறது, மூன்றாவது
கார்பன் அனுவுடன் இரண்டு ஆக்சிஜன் அணுக்களும் ஒரு ஹைட்டிராஜன் அணுவும் இணைந்து
இருக்கிறது. இவ்வகை இணைப்பு மூலக் கூறு அமில மூலக் கூறு என்று சொல்லப்படுகிறது.
நான்கு வகையான அணு இணங்களைச் சேர்ந்து இருபத்துமூன்று அணுக்கள் கொண்ட இந்த
முக்கியமான அமினோஅமிலம் புற ஊதாக் கதிர்களைச் செலுத்தியதால் உண்டானதாகும். கதிர்
இயக்கத்தினால் நூற்றுக் கணக்கான இரசாயன செயற்கை பொருள்கள் உண்டாகின்றன. அவற்றில்
பெரும்பாலானவை ஒரு நொடி நேரம் கூட நிலைத்து நிற்பது இல்லை பினைல் அலனினும் சில
அமினோஅமிலங்களும் நிலைத்து இருக்கக் கூடியவை ஒரு தடவை உண்டாக்கப்பட்டால் பின்னர்
கோடிக்கணக்கான வருடங்கள் ஆனாலும் அவை மாறுவது இல்லை இந்த அடிப்படையிலேயே
பழங்காலத்து உயிர்களின் பாசில்களை (fossil) நாம்
இன்று ஆராயும்போதுதெரிய வருகிறது.
இவ்வாறு செயற்கைச் சூழ் நிலையில் உண்டான
அமினோஅமிலங்கள் எல்லாவற்றிலும் இரண்டாவது கார்பன் அணுவில் அமினோஅமிலக் மூலக் கூறு
இணைக்கப்பட்டு இருக்கும். இதை அமினோ ஆல்பா அமினோஅமிலங்கள் என்று அழைக்கலாம். நமது
உடலில் உள்ள புரதங்களும் பாசில்களில் உள்ள ( பாசில்கள் –கோடிக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட உயிர்களின் படிமங்கள் ) புரதங்களும் இவ்வகை
அமினோஅமிலங்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கார்பன் அணுக்களின் நிலை
மாற்றி அமினோஅமில மூலக் கூறு மூன்றாவது கார்பன் அணுக்களுடன் இணைந்து இருந்தால்
பீட்டா அமினோஅமிலங்கள் உண்டாக்கும். பீட்டா அமினோஅமிலங்கள் இணைந்து நமது உடலில்
உள்ள புரதம் உண்டானால் அதற்கு வேறு குணங்கள் இருக்கும். மனிதனும் வேறு உருவத்தில்
இருந்து இருப்பான். கார்ப்பன் அணு உடல் அமைப்பை மாற்றுகிறது என்பதற்கு இது ஒரு
உதாரணம். கார்பன் அணுவின் அமைப்பிலேயே உயிரை உண்டாக்கக்கூடிய சக்தி இருக்கிறது.
எல்லாவித மூலப்பொருள்களை விட கார்பன் அணுவுக்கே பல மூலக் கூறுகள் இணைந்து மிகப்பெரிய
உருப் பெற்றும் பல வகையான வடிவங்களைப் பெற்றும் பல் வேறு பொருள்களை உண்டாக்கும்
சக்தி அதிகம் இருக்கின்றது. இத்தகைய பல காரணங்களைக் கொண்ட கார்பன் மூல அணுக்கள்
இருந்தால்தான் நாம் பூமியில் உள்ள பல விதமான உயிர்களைக் காண்கிறோம். சடப்பொருள்
உண்டானபோதே உயிர்கள் உண்டாக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்
ஒருவகையில் இது உண்மையாக இருக்கலாம். கார்பன் அணுக்களில் எலக்ட்ரான்களின் இணையும்
சக்தி உயிரின் முன்னோடியாகக் கருதலாம். இன்னும் இவைபற்றி விவரிக்கின் அது நமது
சித்தர்களைப் பற்றிய கருத்துக் கூறலில் இருந்து மா. இச்செய்தியை ஏன் சொல்கிறேன்
என்றால் நமது இன்றைய வளர்ச்சியையும் அன்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்
சித்தர்களின் காலச் சூழ்நிலையில் எப்படி இருந்து இருக்க முடியும் என்பதை நாம்
புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன். இனி சித்தர்களின் கடவுள்நிலை இரண்டாம்
பகுதியில் தொடர்வோம்.